• Apr 19 2024

ராபர்ட் மாஸ்டரை நினைத்து உருகி பேசியுள்ள ரச்சிதா-என்ன தான் கூறினார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 பிக் பாஸ் ஷோவிலிருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறி உள்ள நிலையில் ரச்சித்தா அவரை நினைத்து உருகி பேசிய விடயம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர் ரச்சித்தா மகாலட்சுமி.மேலும் இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து பல சீரியல்களில் நடித்து அனைவருக்கு பிடித்த நடிகை என பெயர் எடுத்தார் ரச்சிதா. அனைவரின் பேவரைட் நடிகையான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நுழைந்ததும், ரசிகர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்கள். நாமினேஷனில் ரச்சித்தா வந்தாலும் ஓட்டுபோட்டு ரசிகர்கள் அவரை காப்பாற்றி விடுகிறார்கள்.

அனைவருக்கும் பிடித்த ரச்சித்தாவை ராபர்ட் மாஸ்டருக்கு பிடித்து போக ,  அவரின் பின்னாலே சுற்றி வந்தார். ராபர்ட் மாஸ்டர் எங்கே இருந்தாலும் ரச்சித்தா மீது ஒரு கண் வைத்து க்யூட்டா சைட் அடித்துக்கொண்டே இருப்பார். அத்தோடு ராஜவம்சம் டாஸ்கில் இருவரும் ராஜா ராணியாக இருந்த போது, அந்த டாஸ்க்கை மகிழ்ச்சியோடு செய்தார் ராபர்ட்.மேலும்  அந்த நேரத்தில் ராபர்ட் மாஸ்டரின் அலப்பறை தாங்க முடியலடா சாமி என கூற வைத்தது.

ராபர்ட் மாஸ்டர் நடந்து கொள்ளும் விதம், ரச்சித்தாவுக்கு சங்கடத்தை கொடுத்தாலும், ஆத்திரத்தில் வார்த்தையை கொட்டிவிடாமல், சிரித்த முகத்துடன் நார்மலா இருங்க. எல்லார் கிட்டையும் எப்படி பேசுறீங்களோ அப்படி என்கிட்டையும் பேசுங்க என மாஸ்டருக்கு பல முறை அட்வைஸ் கொடுத்தும் அவர் அதை பொருட்படுத்தாமல் மூக்குத்தி மூக்குத்தி என ரச்சிதாவிற்கு தொடர்ந்து நூல்விட்டுக்கொண்டே இருந்தார்.இது ரசிகர்களுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்தி இருந்தது.


கடந்த வாரம் நடந்த ஒப்பன் நாமினேஷனில் சிக்கிய ராபர்ட் மாஸ்டர் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். மேலும் அவர் வெளியில் செல்லும் போதுக்கூட ரச்சித்தா ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை. அனைவரையும் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து விடைபெற்ற ராபர்ட் மாஸ்டர் ரச்சித்தாவிடம் கையை கொடுத்து கிளம்புகிறேன் என்று கூறினார். ரச்சித்தா கண்ணீர் விட்டு கதறி அழுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

எனினும் இதையடுத்து, ராபர்ட் மாஸ்டர் குறித்து ரச்சித்தா மற்றும் கதிர் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் கதிர், ராபர்ட் மாஸ்டர் இருந்தது ஹேப்பியா இருந்தது என்றார். எனினும் இதற்கு ரச்சித்தா ஆமாம், இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் இப்படி நபர் க்ராஸானது ஒரு நல்ல விஷயமா நினைக்கிறேன். இந்த வீட்டில் இருந்து தானே அவர் வெளியில் போய் இருக்காங்க, தாட்ஸ் அப்படியே இருக்கு என்றார்.


இந்த வீட்டில் போன் மற்றும் டிவி இல்லாததால் நாம் அதிக நேரம் அடுத்தவர்களுடன் பேசுகிறோம் இதனால் தான் ராபர்ட் மாஸ்டர் வெளியில் போனது கஷ்டமா இருக்கு வேற என்ன பண்றது இது தான் கேம் என்றார் கதிர். இதையடுத்து, பேசிய ரச்சிதா எனக்கு எப்படி இருக்குனா? 24/7 கேமரா என்னை பார்த்துகிட்டு இருந்துதோ இல்லையோ, ராபர்ட் மாஸ்டர் 24 மணி நேரமும் என்னை கவனித்துக்கொண்டே இருந்தார். அது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு என்று ராபர்ட் மாஸ்டரை நினைத்து உருகி பேசியுள்ளார்.


மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், மாஸ்டர் வீட்டில் இருக்கும்போது அவரை நீங்க மதிக்கவே இல்லை இப்போது அவரை நினைத்து உருகுகிறீர்கள். இதுதான் ஒருவர் இருக்கும் போது அவரின் அருமை தெரியாது இல்லாத போதுதான் தெரியும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement