• Apr 24 2024

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பிடித்த தமிழ் நாட்டு டிஷ் என்ன தெரியுமா?- விஜய்யோட அம்மா செய்து கொடுத்திருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் முக்கியமான படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்பொழுது விஜய் நடிப்பில வெளியாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார்.

முன்னதாக நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்திலும் இவர் கிராமத்து கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழில் இவரது அறிமுகப்படமாக அமைந்தது. கர்நாடகாவின் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற போதிலும் தமிழ் மீதும் நடிகர் விஜய் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்து வருகின்றார்.


இந்தப் படத்தில் நடிக்க இவருக்கு அதிகமான ஸ்கோப் இல்லையென்ற போதிலும், நடனக் காட்சிகளில் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிறுவயதில் விஜய் படங்களை தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து சென்று பார்ப்பேன் என்று வாரிசு படத்தின் ப்ரமோஷனின்போது தெரிவித்திருந்தார். மேலும் தான் மிகவும் விரும்பி ரசித்த விஜய்யுடன் இணைந்து நடித்தது தன்னுடைய கனவு நனவான தருணம் என்றும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.


இதனிடையே தன்னுடைய சமீபத்திய பேட்டியொன்றில் தன்னுடைய மிகவும் பேவரைட்டான டிஷ் என்றால் அது தமிழ்நாட்டு சாம்பார் தான் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே விஜய்யின் அம்மா ஷோபா ராஷ்மிகாவிற்காக சாம்பார் செய்து கொடுத்து அதை ராஷ்மிகா மிகவும் ரசித்து ருசித்து சாப்பிட்டுள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement