• Apr 25 2024

10 வருடங்களுக்கு முன்பாக.. நடிகர் மணிகண்டன் குறித்து சின்மயி பகிர்ந்துள்ள ட்வீட்...என்ன சொல்லியுள்ளார் தெரியுமா..?

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல திறைமைகளை கொண்டு வளர்ந்து வரும் நடிகராக திகழ்பவர் மணிகண்டன். காலா, ஜெய் பீம் போன படங்களில் தனது அசாத்தியமான நடிப்பால் முத்திரை பதித்திருந்தார். இவர் நடிப்பில் தற்போது 'குட் நைட்' என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாகவே மும்முரமாக நடந்து வந்தது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்

சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' படத்தில் ராசாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை அள்ளியவர் மணிகண்டன். இவர் தற்போது அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ள 'குட் நைட்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மணிகண்டனுடன் மீததா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குறட்டையால் ஒரு மனிதன் சந்திக்கும் பிரச்சனையாய் ஜாலியாக படமாக்கியுள்ளனர். இந்தப்படத்தின் டிரெய்லர், ஸ்னிக் பீக் வீடியோக்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்தப்படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் மணிகண்டன் பல குரலில் பேசி அசத்தினார். அத்தோடு அஜித் 'வாலி' படத்தில் எப்படி பேசினார். தற்போது எப்படி பேசுகிறார் என்பது வரை பேசி பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அதே போல் மறைந்த நடிகர் ரகுவரன் போலவும் பேசி அசத்தினார். இதற்கான புரமோ வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பாரத்த ரசிகர்கள் மணிகண்டனுக்குள் இவ்வளவு திறமையா என ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர். எனினும்  அந்த வகையில் பாடகி சின்மயி, இந்த ப்ரமோ வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து மணிகண்டன் குறித்து பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அத்தோடு அதில், பல்வேறு திறமைகளை கொண்டுள்ள மணிகண்டன் அதிகம் கொண்டாடப்பட வேண்டியவர். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக என்னுடைய நிறுவனத்தில் இந்திய தேர்தல் ஆணைய பயிற்சி வீடியோக்களுக்கு டப்பிங் பணிகள் செய்து வந்தோம். அப்போது சுமார் இரண்டு வாரங்களாக உறக்கம் இல்லாமல் பணியாற்றி வந்தோம். எங்கள் குழுவில் இருந்தவர்களில் மணியும் ஒருவர்.

ஒரு பயிற்சி வீடியோவில் பஞ்சாபி முதியவர் உட்பட அனைவருக்கும் குரல் கொடுத்து எங்களை அசத்திவிட்டார் மணிகண்டன். உறக்கமில்லாமல் பணியாற்றிய நாட்களை மகிழ்ச்சிகரமாக மாற்றியது மணி தான் என பதிவிட்டுள்ளார். சின்மயிவின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




Advertisement

Advertisement

Advertisement