• Apr 20 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன் உயிர் நண்பன் அசீமுக்கு கூறிய அட்வைஸ்ட் என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் வீட்டில் ஏராளமான டாஸ்க்குகள் நடைபெறுவதால் போட்டியாளர்களுக்கிடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த வாரம்  Freeze டாஸ்க் நடைபெற்றதால் அனைத்து போட்டியாளர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர்.

அப்படி வந்த குடும்பத்தினர், அங்குள்ள பேவரைட் போட்டியாளர்கள் பற்றியும், அவர்கள் விளையாடுவது குறித்தும் நிறைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இதனால் கடந்த வாரம் பிக்பாஸ் வீடு கலகலப்புடனும் நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் நிறைந்திருந்தது.


இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் மணிகண்டன் எவிக்டாகி வெளியேறினார்.அசீம், மைனா நந்தினி உள்ளிட்ட போட்டியாளர்கள் கண் கலங்கியும் போன நிலையில், அவரை வாழ்த்தியும் அனுப்பி இருந்தனர்.தற்போது 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் அடுத்த சுற்றுக்கான விளையாட்டையும் தீவிரமாக விளையாடி வருகின்றனர். 

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது அசீமிடம் மணிகண்டன் பேசிய விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது. கமல்ஹாசன் அருகே நின்ற படி போட்டியாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்த மணிகண்டன், அசீமிடம் "நல்லா விளையாடு, கோவப்படாத. தயவு செஞ்சு விக்ரமன் கூட சண்டை போடாத. மரியாதையா எல்லார்கூடயும் நடந்து ஒழுங்கா இரு. லவ் யூ மச்சான்" என தெரிவிக்கிறார். 


முன்னதாக, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது விக்ரமனை கட்டியணைத்து பேசிய மணிகண்டன், "ப்ரோ. எதையும் மனசுல வெச்சுக்காதீங்க. உங்கள வேதனைப்படுத்தி இருந்தா என்ன மன்னிச்சுக்கோங்க. லவ் யூ ப்ரோ. கண்டிப்பா நான் இந்த மாதிரி கிடையாது. நீங்க வெளில வாங்க. நம்ம நட்ப தொடங்கலாம். இங்க நம்ம நட்ப தொடங்க முடியல" என கூறினார்.இதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்தும் வெளியேறும் கடைசி தருணத்தில், "விக்ரமன் Finale வாங்க" என்றும் மணிகண்டன் கூறிவிட்டு வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.














Advertisement

Advertisement

Advertisement