• Apr 25 2024

ரசிகர்களுக்காக செருப்பு அணியாத பிரபல நடிகர்... இதன் பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப்பச்சன். இவர் 80 வயதிலும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் படப்பிடிப்புகளில் சோர்வின்றி விடாமுயற்சியோடு சுறுசுறுப்பாக பங்கேற்று வருகிறார். இவரின் நடிப்பில் உருவாகும் படங்கள் யாவுமே வெற்றிப் படங்கள் தான் என்று கூறுமளவிற்கு தன்னுடைய நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தக் கூடியவர்.


இவரின் நடிப்பிற்கென்றே இவருக்கு ஏராளம் ரசிகர் கூட்டம் உண்டு. இதனால் மும்பையில் தான் மிகவும் விரும்பி கட்டிக் கொண்ட அழகிய ஜல்சா வீட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் தனது ரசிகர்களை நேரில் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். 

ஆனால் கொரோனா சமயத்தில் மட்டும் சந்திக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கொரோனா குறைந்த பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். அதுமட்டுமல்லாது அவர்களோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார். இந்நிலையில் தான் ஒரு புகைப்படத்தில் அமிதாப்பச்சன் செருப்பு அணியாமல் இருந்ததைப் பலரும் பார்த்து விட்டார்கள். 


இவ்வாறு செருப்பு அணியாமல் இருக்கும் காரணத்தை பற்றி அமிதாப்பிடம் நேரடியாகக் கேட்டபோது, 'நான் எப்போதும் எனது ஜல்சா வீட்டில் ரசிகர்களை சந்திக்கும்போது செருப்பை கழட்டி விடுவேன். ஏனென்றால் எனக்கு ரசிகர்கள் என்றால் மிகவும் பக்தி. அவர்களை சந்திப்பதை ஒரு ஆன்மிக நிகழ்ச்சிபோல நான் எப்போதுமே நினைக்கிறேன். 

அதுமட்டுமல்லாது என்னை வாழவைக்கும் தெய்வங்களாகவே நான் அவர்களை பாவிக்கிறேன். அவர்கள் இல்லாவிட்டால் நான் இல்லை. 80 வயதிலும் கூட என்னை ரசிக்கும் ரசிகர்களுக்கு நான் செய்யும் சிறிய மரியாதை இது" என்று மிகவும் உருக்கமாக பதிலளித்துள்ளார் அமிதாப்பச்சன்.

Advertisement

Advertisement

Advertisement