• Mar 29 2024

ரம்பாவின் மகன் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா... ப்பா இந்தளவிற்கு வளர்ந்து விட்டாரே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரைப்பட நடிகைகளில் பிரபலமான ஒருவரே நடிகை ரம்பா. இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி எனப் பல மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான 'மானாட மயிலாட' என்ற நிகழ்ச்சியின் நடுவராகவும் பங்குபற்றி புகழ் பெற்றார்.


அந்தவகையில் ரம்பா தமிழ் சினிமாவில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா' என்ற படத்தின் மூலமாகவே கதாநாயகியாக அறிமுகமானார்.

எனினும் இதற்கு முன்னர் அவர் 1993 இல் 'உழவன்' படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அந்தப் படம் அவரை அதிகளவிற்கு மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்கவில்லை. 

இதனைத் தொடர்ந்து 'உள்ளத்தை அள்ளித்தா' என்ற படத்தின் மூலம் அதிகளவில் பேமஸ் ஆனார். அறிமுகப் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வந்த இவர் தொடர்ந்து 'செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கின்றார்.


ரம்பாவின் நடிப்பினைத் தாண்டி அந்தக் காலத்தில் அவரின் அழகிற்கு மயங்காத இளைஞர்களே இல்லை என்று கூற முடியும். அந்தளவிற்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை அடித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது முரளி, விஜயகாந்த், விஜய், சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார். 

இவ்வாறாக பல படங்களிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வந்த நடிகை ரம்பாவிற்கு இந்திரகுமார் பத்மநாதன் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இந்த அழகிய தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.


குடும்ப வாழ்க்கையை தொடர்ந்து ரம்பா எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றார். 

அந்தவகையில் தற்போதும் தன்னுடைய மகனுடன் இருக்கும் அழகிய வீடியோ ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார். அதில் அவரின் மகன் ரொம்பவே வளர்ந்து அழகாக இருக்கின்றார். இந்நிலையில் இந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement