கார்த்தி என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.
அதுமட்டுமல்லாமல் இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்ற விருதுகள் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் மணிரத்னம் இயக்கிய பாென்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து பரவலாக பேசப்படுகிறார்.
இந்நிலையில் மித்ரன் கார்த்தியை வைத்து இயக்கிய திரைப்படம் தான் சர்தார். கார்த்தி 2 கதாபாத்திரங்களில் நடிக்க ராஷி கண்ணா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.மேலும் நாளுக்கு நாள் படத்திற்கான வரவேற்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த அக்டோபர் 21ம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 55 கோடி வரை வசூலை எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இப் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் கண்டிப்பாக வசூலில் பெரிய சாதனை படைக்கும் என்கின்றனர்.
Listen News!