• Mar 29 2024

சன் டிவி ஆங்கருடன் காதலில் விழுந்த எதிர் நீச்சல் சீரியல் நடிகை! யார் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பொதுவாகவே சிரியல் என்றாலே அதற்கு அதிக வரவேற்பு ரசிகர்களின் மத்தியில் பல காலமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் சன் டிவி, ஜீ டிவி, விஜய் சன் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. 

குறிப்பாக சீரியல்களில் நடக்கும் நிகழ்வுகள் மக்களை எளிதாக சென்றடைகின்றன. ஆனால் சினிமாவை விட சீரியல்களில் அதிக பிற்போக்கு கருத்துகள், ஆணாதிக்கத்தை செலுத்துவதை ஹீரோயிஷமாக காட்டுவது. பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் என இருந்து வருகின்றனர்.

ஆனால், அந்த தடையை உடைத்து பெண்கள் புரட்சி பேசும் ஒரு தொடராக திகழ்ந்து வருகிறது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியல். 

இந்த தொடரில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, கமலேஷ், மாரிமுத்து என்று பலர் நடிக்கின்றனர். அந்த வகையில் இந்த தொடரில் நந்தினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹரிப்ரியா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர்.

இதை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு என்ற தொடரில் நடித்தார்.பின் சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பிரியமானவள் என்ற தொடரில் இசை என்ற கதாபாத்திரத்தில் ஹரிப்ரியா நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் என்று சொல்லலாம். பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

இதனிடையே நடிகை ஹரிப்ரியா அவர்கள் 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த வீடியோ, புகைப்படம் என அனைத்துமே சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள். இப்படி சந்தோஷமாக இருந்த இவர்கள் திடீரென்று விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியாக இருந்தது.

மேலும், ஹரிப்பிரியாவின் விவாகரத்துக்கு காரணம், சன் டிவி தொகுப்பாளர் அசார் தான் என்று கூறப்பட்டது. இது குறித்து ஹரிப்ரியா கூறிய போது , எங்களுக்கு எந்த ஜாதி மதம் எதிர்ப்பு என எதுவும் இல்லை. ஒரு பெண்ணின் வெற்றிக்கு காரணமாக ஒரு ஆண் இருப்பான். அவர் என் காதலனோ, கணவனோ கிடையாது. பின் எப்படி அவர் என்னுடைய ஆத்மார்த்தமான நபராக இருக்க முடியும்.

அதே போல் அந்த மனிதர் என்னுடைய பாய்பிரெண்ட் கிடையாது. காதல் கிடையாது, என் வாழ்க்கை துணையும் இல்லை .மகிழ்ச்சியாக பேசுவதே என்னுடைய பிறப்புரிமை. தவறு என்னுடையது இல்லை. பார்ப்பவர்களிடம் தான் உள்ளது. இதை நல்ல மனதோடு பார்த்தால் தவறாக தெரியாது என்று பரவிவந்த வதந்திகளுக்கு ஹரிப்ரியா முற்றுப்புள்ளி வைத்து இருந்தார். 

Advertisement

Advertisement

Advertisement