• Apr 20 2024

திருமணத்தின் பின்னர் முதல் முதலாக தனது மனைவியுடன் எடுத்த போட்டோவைப் பதிவிட்ட இயக்குநர் பி.எஸ். மித்ரன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ். மித்ரன். இந்த திரைப்படத்தில் விஷால், அர்ஜூன், சமந்தா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

முதல் படமே பெரிய அளவில் ஹிட்டானதை தொடர்ந்து இரண்டாவது படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் "ஹீரோ"  திரைப்படத்தையும் மித்ரன் இயக்கி இருந்தார். அடுத்தடுத்து இரண்டு படங்களும் வெற்றி பெற்ற பின்னர் அடுத்து மித்ரன் இயக்கிய 'சர்தார்'  திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.அடுத்தடுத்து  ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கும், சினிமா பத்திரிக்கையாளரான ஆஷாமீரா என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.


இந்நிலையில், பி.எஸ். மித்ரன் - ஆஷாமீரா ஆகியோரின் திருமணமும் தஞ்சாவூரில்  நடந்து முடிந்துள்ளது. இயக்குநர் பி.எஸ். மித்ரன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி ஆஷாமீரா குறித்து பதிவிட்டுள்ளார். "வழிப்போக்கர் தனது கலங்கரை விளக்கத்தைக் கண்டுபிடித்தார்" என தலைப்பிட்டு திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை மித்ரன் பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement