• Apr 19 2024

''ராத்திரி ஒரு மணிக்கு குழி தோண்டி, மந்திருச்ச பொம்மை வைச்சாங்க''- பொன்னம்பலம் கூறிய அதிர்ச்சி தகவல்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் கலந்துக் கொண்டார். அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ வைரலாகி வந்தது.

இதையடுத்து பலரிடம் உதவி கேட்டார். சரத்குமார், கமல், சிரஞ்சீவி என பலர் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர். இதைத்தொடர்ந்து பொன்னம்பலத்தின் சொந்த அக்கா மகனே தன் கிட்னியை கொடுத்து அவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவினார். தற்போது இவர் உடல் நலம் தேறி வருகிறார்.பொன்னம்பலத்தின் சிறுநீரக பிரச்சினைக்கு குடிப்பழக்கம் தான் காரணம் என பல்வேறு வதந்திகள் கிளம்பியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பொன்னம்பலம் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, " குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதால் எனது சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாக பலர் நினைத்தனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை. என் தந்தைக்கு நான்கு மனைவிகள். மூன்றாவது மனைவியின் மகன் என் மேலாளராக சில காலம் பணிபுரிந்தார். நான் அவரை மிகவும் நம்பினேன். ஆனால், ஒரு கட்டத்தில் அவர் எனக்கு ஸ்லோ பாய்சனை உணவில் கலந்து கொடுத்தது தெரியவந்தது. 

இது எப்படி தெரிய வந்தது? என்ற கேள்விக்கு ..விடியப்புறம் 1,2 மணி இருக்கும் ,ஒரு யோசனையால தூக்கம் வராம சிகிரெட் பிடித்துக்கொண்டு இருந்தேன் .அப்போ அவரு கடப்பாறையை வைச்சு குழி தோண்டிட்டு அந்த குழியில என்னுடைய லுங்கி,மந்திரிச்ச பொம்மை வைக்கிறாங்க ,நான் அத என்னெண்டு கேட்டுட்டு விட்டுடன்.பிறகு உண்மையை சொல்லு  இல்லன்னா போலீஸ்ல முறைப்பாடு பண்ணி உள்ள தள்ளிடுவன் என்று சொல்ல உண்மையை சொல்லிட்டாரு. நான் நல்ல நிலையில் இருக்கிறேன். அவனால் நன்றாக வாழ முடியவில்லை என்ற பொறாமையால் இதை அவர் செய்தார்.என மேலும் கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement