• Apr 18 2024

தினேஷ் கிட்ட பேசினியா?-உளறிய ஷிவின், ரச்சிதாவின் எதிர்பார்க்காத செயல்- ஏமாந்து போன ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்போது கடைசி வாரத்தில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இன்னும் இந்த நிகழ்ச்சி முடிவடைய ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்றனர்.

அத்தோடு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து எவிட் ஆகி வெளியேறிய ரச்சிதாவும் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்திருக்கிறார்.


ரச்சிதாவின் வருகையை அவருடைய நெருங்கிய தோழியான ஷிவின் ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்திலும் தான் ரச்சிதாவை அதிகமாக மிஸ் பண்ணுவதாக கூறிக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் இன்று ரச்சிதா வந்ததும் அவரிடம் அதிகமான கேள்விகளை கேட்டுக்கொண்டு பாசமாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஷிவின் கேட்ட ஒரு கேள்வி ரச்சிதாவை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஷிவின் ரச்சிதாவிடம் நீ தினேஷிடம் பேசினியா என கேட்க எந்த பதிலும் சொல்லாமல் முறைத்தபடி இருக்கிறார். பிறகு தான் கேட்டது தவறு என்று புரிந்து கொண்டாரோ என்னவோ ஷிவினும் நான் சொன்னேன். இந்த வாரம் வெளியேறிய ஏடிகேவிடம் பேசினியா என்று கேட்பதற்கு மாறி தினேஷ் என்று கேட்டு விட்டேன் என்று சொல்ல நான் ஒன்னும் பேசவில்லை என்று ரச்சிதா பேசி முடிக்கிறார்.


ஆனால் அருகில் இருந்த அனைவரும் தினேஷ் என்ற கேள்வியை ஷிவின் கேட்டதும் சிரிக்கின்றனர். ஆனால் ரச்சிதா கோபத்தோடு தான் இருக்கிறார். இதனால் ஷிவின் ரச்சிதாவிடம் அப்படியே சமாளித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement