• Apr 16 2024

சின்மயின் அழுத்தம் தான் சுகாசினி இப்படி செய்தாரா..? உண்மையை உடைத்த பிரபலம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து  முன்னணியில் திகழ்பவர் தான் இயக்குநர் மணிரத்தினம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’.பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை தற்போது திரைப்படமாக இயக்கியுள்ளார் மணிரத்னம்.

மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். 



இந்த படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


சுஹாசினி மற்றும் சின்மயி இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்த நெருங்கிய தோழிகள்.சின்மயி சுகாசினிக்கு ப்ரசர் கொடுத்தாங்கள் என்றும் சுகாசினி மணிரத்னத்திற்கு ப்ரசர் கொடுத்து தான் வைரமுத்துவை பொன்னியின் செல்வனில் பணியாற்ற விடாமல் தடுத்தார் என்ற கிசுகிசு வந்த நிலையில் மணிரத்னமும், வைரமுத்து உடன் இணைந்து பல திரைப்படங்கள் பணியாற்றி விட்டோம். புதிய திறமையாளர்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த முடிவு என மழுப்பலாக பதிலளித்துள்ளார்.


ஏன் இப்படி அவர் மழுப்பலான பதில் கூறினார் என பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் விளக்கம் கொடுத்துள்ளார்.அதாவது வைரமுத்துடன் பணியாற்றதற்கு அவர் மழுப்பலான காரணம் கூறியது உண்மை தான்.ஆனால் நீங்கள் கூறுவது மாதிரி சுகாசினிக்கு சின்மயி அழுத்தம் கொடுத்தது என்ற காரணத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.அதில் இருந்து நான் மாறுபடுகின்றேன்.சுகாசினி சொன்னதால் அவருக்கு வாய்ப்பு கொ்க்கவில்லை என்று எடுத்துக்கொண்டாலும் ஏ.ஆர்.ரகுமான் எத்தனை படங்களில் பணியாற்றி உள்ளார்.அதில் ஏன் வைரமுத்துக்கு வாய்ப்பு தரவில்லை என கேள்வி கேட்டுள்ளார்.இப்படி நாசுக்காக விளக்கம் கொடுத்த அந்த நடிகர் கடைசியில் ஏ.ஆர்.ரகுமான் தான் எல்லாத்துக்கும் காரணம் என அந்த விடயத்தை முடித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement