• Apr 25 2024

சம்யுக்தா கல்யாணம் பண்ணுறதுக்காக நிறைய ட்ராமா போட்டாரா?- மீண்டும் உண்மைகளை உடைத்த விஷ்ணுகாந்த்

stella / 11 months ago

Advertisement

Listen News!

சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இருவரும் 'சிப்பிக்குள் முத்து' சீரியல் மூலம் பிரபலமானார்கள். சமூக வலைத்தளம் வாயிலாக தங்களது காதலை ரசிகர்களுக்கு அறிவித்த இவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். எட்டு மாதங்களாக காதலித்த இவர்கள் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு சின்னத்திரையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில் சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இருவரும் இன்ஸ்டாகிராமில் தங்களது திருமண புகைப்படங்களை டெலிட் செய்து ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்தனர். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்குவதை போல் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் வெளியிட்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


இந்நிலையில் தங்களின் பிரிவு குறித்து யூடிப் பேட்டி ஒன்றில் பேசிய விஷ்ணுகாந்த், எங்களின் பிரிவுக்கு காரணம் சம்யுக்தாவின் தந்தை தான் என தெரிவித்திருந்தார். திருமணத்திற்கு முன்பு எட்டு மாதங்கள் காதலித்த சமயத்தில் வராத பிரச்சனை, திருமணமான 15 நாட்களில் ஏற்பட்டதாகவும் கூறினார். விஷ்ணுகாந்தின் பேட்டியை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய சம்யுக்தா, பேட்டியில் அவர் பகிர்ந்திருந்த அனைத்து தகவலுக்கும் பதிலளித்தார்.


இவ்வாறு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வரும் நிலையில் விஷ்ணுகாந்த் மீண்டும் ஓர் பேட்டியளித்துள்ளார்.அதில் எனக்கு முதலில் இப்படியெல்லாம் பிரச்சினை வரும் என்று தெரியாது. அவங்க அப்பா தான் காரணம் அவங்க வந்ததுக்கு பிறகு தான் இப்படியெல்லாம் ஆச்சு,கல்யாணத்துக்கு முதல் நகை எல்லாம் அடைவில இருக்கு என்ற சொன்னாங்க எடுத்து தருகிறேன் என்று சொன்னேன். அதெல்லாம் ட்ராமா என்று முதலில் தெரியல அதுக்கு பிறகு தான் தெரிஞ்சிச்சு  என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement