• Apr 20 2024

திருமணத்திற்கு முன்பு நயனைப்போல மஞ்சிமா, கவுதம் கார்த்திக் அதைச் செய்தார்களா..? வெளியானது உண்மை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திருமணத்திற்கு முன்பே மூன்று ஆண்டுகளாக லிவ் இன் முறைப்படி வாழ்ந்ததாக வெளியான தகவல் குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் மஞ்சிமா மோகன்.

முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் படத்தில் நடித்தபோது கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இடையே நட்பு ஏற்பட்டது. மேலும் அந்த நட்பு காதலாக மாறியது. மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள் இருவரும். காதலை வீட்டில் சொல்லி சம்மதம் பெற்று நவம்பர் 28ம் தேதி சிம்பிளாக திருமணம் செய்து கொண்டார்கள். அந்த திருமண விழாவில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதற்கிடையே மஞ்சிமா, கவுதம் கார்த்திக் பற்றி வேறு ஒரு தகவல்  தீயாய் ரவி வருகின்றது.

நயன்தாரா, விக்னேஷ் சிவனை போன்று திருமணத்திற்கு முன்பு கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் மூன்று ஆண்டுகளாக லிவ் இன் முறைப்படி வாழ்ந்தார்கள் என்று பேசப்பட்டது.மேலும்  இது குறித்து மஞ்சிமா மோகன் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த பேட்டியில் மஞ்சிமா கூறியதாவது, பான்டமிக்கின்போது நான் என் வீட்டில் தனியாக இருந்தேன். அவர் தன் அம்மாவுடன் அவர் வீட்டில் இருந்தார். எங்களை பொது இடத்தில் சேர்ந்து பார்த்ததால் மீடியா தன் இஷ்டத்திற்கு எழுத முடிவு செய்தது. அத்தோடு கடந்த மூன்று ஆண்டுகளாக நானும், அவரும் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக சொல்வதில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

மூன்று ஆண்டுகளாக காதலித்தபோதிலும் அதை ரகசியமாக வைத்திருந்தார்கள். கடந்த சில மாதங்களாகத் தான் அவர்களை பற்றி கிசுகிசுக்கப்பட்டது. எனினும் இதையடுத்து தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டு காதலை உறுதி செய்தனர். அதன் பின்னர்  திருமண அறிவிப்பு வெளியிட்டனர். திருமணம் முடிந்த கையோடு புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தங்களின் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

அத்தோடு தேவராட்டம் படத்தில் நடித்தபோது ஓராண்டாக நண்பர்களாக இருந்து வந்தார்கள். அதன் பின்னர்  கவுதம் கார்த்திக் தான் மஞ்சிமாவிடம் காதலை சொல்லியிருக்கிறார். உடனே பதில் சொல்லாமல் இரண்டு நாட்கள் கழித்து ஐ லவ் யூ டூ என்று பதில் சொல்லியிருக்கிறார் மஞ்சிமா. அது என்ன அந்த இரண்டு நாள் கணக்கு மஞ்சிமா மோகன். கொஞ்சம் சொல்லுங்களேன், தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மஞ்சிமா நடிப்பில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்திருக்கிறார். ஆனால் திருமதியான பின்னரும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். உங்களை தொடர்ந்து பெரிய திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறோம் என ரசிகர்கள் கூறியுள்ளனர். கவுதம் கார்த்திக்கோ சிம்புவுடன் சேர்ந்து பத்து தல படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் அவர் நடித்துள்ள 1947 படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement