• Apr 20 2024

ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் சம்பளமாகக் கேட்டாரா?- ஷாக்கான இயக்குநர் கே. எஸ் ரவிக்குமார்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காமெடி நடிகராக வலம் வருபவர் தான் வடிவேலு. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டவர்.

மேலும் நடிகர் சங்கத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடிக்காமல் இருந்தார்.தற்பொழுது மீண்டும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்,படத்தில் கதாநாயகனாகவும் மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2  ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


இந்நிலையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் அவரது தம்பி எல்வின் நடிக்கும் படத்தில் அவரை நடிக்க வைக்க அணுகியுள்ளனர். ஆனால் அவர் ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டு இயக்குநர் கே எஸ் ரவிக்குமாருக்கு ஷாக் கொடுத்துள்ளாராம். 

இதனால் அவரை சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள சொல்லி பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இது குறித்த தகவல் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement