• Apr 20 2024

தனுஷ் மறுமணம் செய்து கொள்ளப் போகிறாரா..? உண்மையைக் கண்டுபிடித்த ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். இந்தப் பிரிவைத் தொடர்ந்து ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.


தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வருவார்கள் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. இதனால் அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வது கடினம் என கூறப்படுகிறது. இருப்பினும் இவர்கள் பிரிந்து வாழ்கின்ற போதிலும் இன்னமும் முறையாக விவாகரத்து பெறவில்லை. 


இந்நிலையில் தனுஷ் ஒரு சில நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வருகின்றார், மறுமணம் செய்து கொள்வாரா..? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. தற்போது இதற்குப் பதிலும் கிடைத்துள்ளது. அந்தவகையில் தனுஷ் கண்டிப்பாக மறுமணம் செய்துகொள்ள மாட்டார். 

ஏனெனில் முன்னதாக செல்வராகவனும், நடிகை சோனியா அகர்வாலும் விவாகரத்து பெற்றனர். அப்பொழுது தன் அண்ணனிடம் தனுஷ் கூறியதாவது, இது கடவுள் கொடுத்த நல்ல வாய்ப்பு. கடைசி வரை சிங்கிளாகவே இருந்துவிடு என்றிருக்கிறார். 


அண்ணனையே மீண்டும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள், சிங்கிளாக இருங்கள் என்று அறிவுரை சொன்ன தனுஷ் கண்டிப்பாக மறுமணம் செய்து கொள்ள மாட்டார் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள் ரசிகர்கள். 

Advertisement

Advertisement

Advertisement