• Mar 29 2024

சூர்யாவை பாஃலோ பண்ணி பிரபல இயக்குநரை கழட்டி விட்ட தனுஷ்-சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட சம்பவம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா.இவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா பிதாமகன் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்லதொரு வெற்றயை பெற்றுக் கொடுத்தது.இதனைத் தொர்ந்து பல முன்னணி இயக்குநர்களுடன் கை கோர்த்து முக்கிய நடிகராக வலம வருகின்றார்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜெய் பீம், சூரரைப் போற்று போன்ற திரைப்படங்கள் பிரமாண்ட வெற்றி பெற்றது.இப்படத்திற்குப் பிறகு  பாலாவும் வணங்கான் திரைப்படத்தில் ஒன்று சேர்ந்தனர். இது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது.


ஆனால் வணங்கான் படம் ஆரம்பித்த நாளிலிருந்து சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே பிரச்சனை என்று அவ்வப்போது வதந்திகள் கிளம்பி கொண்டு இருந்தன. அதே நேரத்தில் படப்பிடிப்பு வேலைகளும் நடந்து கொண்டுதான் இருந்தன. இதற்கு இடையில் திடீரென்று நடிகர் சூர்யா வணங்கான் படப்பிடிப்பிலிருந்து கிளம்பி சென்னை வந்து விட்டார்.

அதன் பின்னர் தான் படப்பிடிப்பின் போது நடந்த பிரச்சினைகள் எல்லாம் பூதாகரமாக வெளிவர தொடங்கின. இருந்தாலும் சூர்யா இது பற்றி இதுவரை எதுவும் பேசாமல் மௌனம் காத்து தான் வருகிறார். இயக்குநர் பாலா மட்டும் சூர்யா இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார். 

மேலும் வேறு ஒரு நடிகரை வைத்து படத்தை தொடங்குவதாகவும் கூறினார்.நடிகர் சூர்யாவை போலத்தான் இப்போது தனுஷும் செய்திருக்கிறார். வாத்தி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகு தனுஷ் கேப்டன் மில்லர் பட வேலைகளை தொடங்கினார். இந்த படத்தை இயக்குநர் அருண் மாத்தீஸ்வரர் இயக்குகிறார்.இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் கேரளா பார்டரில் நடந்து கொண்டிருக்கின்றன.


படப்பிடிப்பு தளத்தில் என்ன நடந்தது என்று சரியாக தெரியவில்லை. நடிகர் தனுஷ் படப்பிடிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு தனது சொந்த காசிலேயே சென்னை திரும்பி இருக்கிறார். இதுவரை தனுஷ் திரும்ப வந்ததற்கான காரணம் தெரியவில்லை. விரைவில் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

Advertisement