• Mar 29 2024

தாங்க முடியாத அளவுக்கு ரொம்ப டார்ச்சர் செய்தார்- மனைவி ஐஸ்வர்யா குறித்து பொது மேடையில் மனம் திறந்த தனுஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் திரை உலகில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து நடித்து வரும் நடிகர் தான் தனுஷ். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய வாத்தி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனை அடுத்து கேப்டன் மில்லர் போன்ற படங்களில் படும் பிஸியாக நடித்து வருகிறார்.


இவ்வாறு படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் யாத்ரா,லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். தொடர்ந்து சினிமா, வாழ்க்கை என இரண்டிலும் சேர்ந்து சூப்பராக பயணித்த இந்த ஜோடி சில பிரச்சனைகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.


இதனை அடுத்து இருவரும் தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யாவும், தனுஷும் இணைந்து 3 என்னும் திரைப்படத்தில் பணியாற்றினர். அந்த படம் வெளிவந்த போது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் இப்பொழுதும் ரசிகர்களுக்கு ஃபேவரைட்டான பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் விழா ஒன்றில் பேசிய நடிகர் தனுஷ் மற்றும் மனைவி ஐஸ்வர்யா கலந்து கொண்டனர். அப்போது நடிகர் தனுஷ் மனைவி கொடுத்த டார்ச்சர் பற்றி விளையாட்டாக அப்பொழுது சொன்னார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. படத்தின் மொத்த அதிகாரம் இயக்குநர் என்பதால், அதை பயன்படுத்திக்கொண்டு ஐஸ்வர்யா தன்னை ரொம்ப டார்ச்சர் செய்தார் எனவும்..


சும்மா எடுத்ததற்கெல்லாம் இங்கே வா.. அங்க போ.. என தன்னை அழைத்தார் எனவும் கிண்டலாக தெரிவித்தார் ஆனால் இதனை ஐஸ்வர்யா முற்றிலுமாக மறுத்தார். ஆனால் 3 படத்தில் இருந்து தான் இருவருக்கும் இடையே  பிரச்சனை ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனை வெடித்து பின் பூதாகரமாக மாறி இருவரும் பிரிந்து இருப்பார்கள் என ஒரு பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement