• Mar 29 2024

தனலட்சுமியின் துரோகம்..மழுப்பிய விக்ரமன்..கதறி அழுத குயின்சி..ஆறுதல் கூறிய பிக்பாஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 38 நாட்கள் ஆகி விட்டன.இந்த நிலையில் இந்த வாரம் ஒரு டாஸ்க் ஹவுஸ்மேட்டுக்கு கொடுக்கப்பட்டது. அதாவது பிக்பாஸ் வீடு ஓர் அரண்மனையாக மாற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

ராஜா ,இளவரசர், ராணி ,இளவரசி, சேவகன், படைத்தளபதி ஆகிய பதவிகளில் யார் யார் இருக்கப் போறீங்க என்று நீங்களே தெரிவு செய்து கொள்ளுங்க என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இதில் இளவரசி போட்டிக்கு தனலக்ஷ்மி, குயின்சி, நிஷாசினி, ஷிவின், ஜனனி ,ஆகியோர் போட்டி போட்டனர். 


அப்போது ஷிவின், மைனா யாருக்கும் கை உயர்த்தவில்லை. குயின்சிக்கு விக்ரமன் கை உயர்த்தும் போது தனலக்ஷ்மி தனலக்ஷ்மியின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தி விடுகின்றார். இது பார்க்கிற ரசிகர்களையும் கடுப்படையச் செய்தது.

இதில் அதிக பேர் ஜனனிக்கு வாக்களித்ததால் ஜனனி இளவரசி ஆனார். இதில் ராஜாவாக ராபேட் மாஸ்டரும் ராணியாக ரச்சிதாவும் தேர்வாகினார்கள். இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் குயின்ஷி மற்றும் ஏடிகே ஆகியோரை அழைத்து குடும்பத்தை எவ்வளவு மிஸ் செய்வதாகவும் அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க என்று கேட்கப்பட்டது.

இதனால் அவர்கள் தமது மனதில் தோன்றியதை பேசிட்டு இருந்ததோடு மனதினை கொஞ்சம் ஆறுதல்படுத்தினார்கள். தொடர்ந்து ஷிவின் இன்றும் கதிரவனிடம் தனது காதலை வெளிப்படுத்த அவர் கண்டு கொள்ளாதது போல சென்று விடுகின்றார். 


பின்னர் பிக்பாஸ் ரோஸ்ட் என்னும் டாஸ்க் நடந்தது. இதில் ராபேட் மாஸ்டர் மற்றும் ஜனனி இருவரும் மாறி மாறி கலாய்த்தார்கள். அதே போல ஷிவின் மற்றும் கதிரவன் ஆகியோர் மாறி மாறி கலாய்த்த போது கதிரவன் வெற்றி பெற்றார்.அதே போல இறுதியாக அமுதவாணன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மாறி மாறி கலாய்த்ததில் அமுதவாணன் வெற்றி பெற்றார்.


மேலும் இடைக்கிடையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தமக்குத் தரப்பட்ட கதாப்பாத்திரங்களாகவே சில நேரங்களில் பேசிட்டு இருந்தனர். இவ்வாறாக அந்த எப்பிஷோட் முடிவடைந்தது.

Advertisement

Advertisement

Advertisement