• Apr 25 2024

அமுதவாணன் செய்த காரியத்தால் அலறி அடித்துக் கொண்டு ஓடிய தனலக்ஷ்மி- அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்குபற்றி வந்த நிலையில் தற்பொழுது இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.அத்தோடு போட்டியும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

மேலும் இந்த வாரம் முழுவதும் பொம்மை டாஸ்க் என்று ஒன்று வைக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி மோதிக் கொண்டனர்.குறிப்பாக அசீம் தனலக்ஷ்மி அமுதவாணன் விக்ரமன் ஆகியோருக்கிடையிலான மோதல் அதிகரித்துக் கொண்டே போனது.


இந்த டாஸ்கில் அமுதவாணன் ராம் ராபட் மாஸ்டர் ஆகியோர் தேர்வாகியுள்ளதோடு அடுத்த வாரத்தின் எலிமினேஷனில் இருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் இந்த வாரம் வீட்டை விட்ட யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.

இவ்வாறு இருக்கையில் நேற்று இரவு அமுதவாணன் பேய் பிடித்தவர் போல நடித்திருக்கின்றார். இதனை முதல் ப்ராங் என்று கூறி வந்த தனலக்ஷ்மி பின்பு அவர் செய்யும் ஆக்ஷன்களைப் பார்த்து திணறி அடித்து ஓடியதோடு பிக்பாஸ் கதவைத் திறவுங்க நான் வீட்டை போறன் என அழுதுள்ளார். பின்னர் இவரை வந்து ஷிவின் சமாதானப்படுத்தியுள்ளார்.அதன் பின்னரே அவர் இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement