• Apr 20 2024

காவ்யாவின் தாலியை அறுக்க நினைக்கும் தேவி-தடுப்பாரா பார்த்திபன்...சோகத்தின் உச்சத்தில் வெளியான வீடியோ...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியல் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜா சீரியல்-2 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.இதில் திருமணத்தில் நடந்த சிறு தவறு காரணமாக காதலர்களாக இருந்த ஜீவாவும் காவியாவும் பிரிந்ததோடு ஜீவா ப்ரியாவையும் பார்த்தி காவியாவையும் திருமணம் செய்தனர்.

என்ன தான் குடும்பத்திற்காக இவர்கள் தமது காதலை தியாகம் செய்திருந்தாலும் காவியா பார்த்தியுடன் சேர்ந்து வாழக் கூடாது என அவரது அம்மா முதல் அத்தை எனப் பலரும் திட்டம் தீட்டி வந்தனர். ஒரு வழியாக காவியா காதலித்த விடயம் பார்த்திபனுக்கும் தெரிந்து விட்டது.இவ்வாறுஇருக்கையில் பார்த்தியின் அத்தை மகளான ரம்மியாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து நிச்சயதார்த்தமும் நடைபெறுகின்றது.


இதன் பிறகு பார்த்திக்கு காவியா மீது காதல் இருந்தாலும் காவியாவிற்கு பார்த்தி மீது காதல் இருந்தாலும் இருவரும் சொல்ல மறுக்கின்றனர்.


இந்நிலையில் பார்த்தியின் மாமியார் காவியை ஆட்களை வைத்து இழுத்துக்கொண்டு வந்து தாலியை அறுக்க முற்படுகின்றார்.ஆனால் காவியாவின் மாமனார் வேண்டாம் என்று சொல்லியும் அதைச் செய்ய முற்படும் போது காவியா மனதிற்கு பார்த்தி நிறுத்த மாட்டாரா எனக் கேட்க...அதே போல் இப்பயாச்சும் என்னை லவ் பண்ணுறேன் என்று சொல்லேன் என இருவரும் கேட்டுக்கொண்டாலும் அமைதியாகவே இருந்து விடுகின்றனர்.


பின்னர் பார்த்தியின் அத்தை தேவி..“ நீகட்டின தாலி காவியா கழுத்தில் இருக்கட்டும் என்றால் சொல்லு..” எனக் கேட்டதும் பார்த்தி...“ என்னை விரும்பாதவா நான் கட்டின தாலியியையும் விரும்ப மாட்டா என்று நினைக்கின்றேன் எனக்கூறுகின்றார்.இதனைக் கேட்டு கதறி அழுகின்றார் காவியா. 


Advertisement

Advertisement

Advertisement