• Apr 20 2024

2மகன்கள் இருந்தும்... ரூ.100 கோடி சொகுசு வீட்டில் புதிய காதலியுடன் குடியேறும் ஹிருத்திக் ரோஷன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். அதுமட்டுமல்லாது இந்திய அளவில் அழகான நடிகர்களில் ஒருவராகவும் ஹிருத்திக் ரோஷன் விளங்கி வருகின்றார். 


மேலும் இவர் 'கிரிஷ், தூம், ஓம் சாந்தி ஓம், கைட்ஸ்' உள்பட பல படங்களில் சிறப்பாக நடித்துள்ளார். இவ்வாறாக பல படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்ற ஹிருத்திக் ரோஷன் தனது மனைவி சுஷானேயை 2014-ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து கொண்டார்.


இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக இருவரும் முறைப்படி விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து விட்டனர். இந்தத் தம்பதியருக்கும் இரண்டு அழகிய மகன்கள் இருக்கின்றனர். அவர்களை இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தே கவனித்துக் கொள்கின்றனர். 


இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன் சமீபகாலமாக ஷபா ஆசாத் என்ற பிரபல பாலிவுட் நடிகையைக் காதலித்து வருகிறார். அத்தோடு ஷபா ஆசாத் ஒரு பிரபல பாடகியாகவும் இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். 

அந்தவகையில் கோவாவில் ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுஷானே புதிய ஹோட்டல் ஒன்றைத் திறந்த போது அதில் கூட யாருமே எதிர்பாராத வகையில் ஹிருத்திக் ரோஷன் தனது புதுக்காதலியோடு சேர்ந்தே கலந்து சிறப்பித்துக் கொண்டார். 


அதுமட்டுமல்லாது ஹிருத்திக் ரோஷன் குடும்ப நிகழ்ச்சிகள், விருந்துகளிலும் ஷபா ஆசாத் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் ஹிருதிக் ரோஷன் தனது காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார். 

அதாவது சிறிது காலம் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ இவர்கள் இருவரும் முடிவு செய்துள்ளனர். மேலும் ஹிருத்திக் ரோஷன் ஏற்கெனவே மும்பை வெர்சோவா கடற்கரையையொட்டி ஆடம்பர சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தில் மூன்று மாடிகளை மொத்தமாக ரூ.97.50 கோடிக்கு வாங்கியிருக்கிறார். தற்போது இந்த வீட்டிற்குத் தனது காதலியுடன் ஹிருத்திக் ரோஷன் குடியேற முடிவு செய்திருப்பதாக தகவல்கல் வெளியாகி இருக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement