• Apr 20 2024

உண்மையான குழந்தைக்கு வந்த ஆபத்து... சிவகாமியிடம் சிக்கிய அர்ச்சனா – இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி-2.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

 சந்தியா தனியாக காட்டுக்குள் சென்ற நிலையில் திடீரென யாரோ ஒருவது போல தோன்ற அது அப்துல்லாக இருக்கிறது. அப்துல் சந்தியாவிடம் இங்கே என்ன பண்ற என கேட்க சத்தம் கேட்டு வந்ததாக சொல்ல நானும் சத்தம் கேட்டு தான் வந்தேன் என அப்துல் சொல்கிறார்.

அத்தோடு  கௌரி மேடம் யாரும் தனியாக எங்கும் செல்லக்கூடாது என சொன்னாங்களா என சொல்ல நீங்களும் தனியா தான் வந்திருக்கீங்க உங்களுக்கும் அதேதான் சொன்னாங்க என சொல்ல சரி வாங்க என அப்துல் அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறார்.அத்தோடு சந்தியாவுக்கு லைட்டாக அப்துல் மீது சந்தேகம் வருகிறது.

அடுத்ததாக வீட்டில் இருந்து அர்ச்சனா கடைக்கு கிளம்ப அப்போது அர்ச்சனாவின் உண்மையான குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக பிக்ஸ் வந்து விட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இந்த விஷயம் அறிந்த அர்ச்சனா பதறி துடிக்கிறார். குழந்தைக்கு என்ன ஆச்சு என்ன தெரியாமல் அப்போது சிவகாமியும் ஜெஸ்ஸியின் அங்கு வந்து என்ன நடந்துச்சு என்று கேட்க அக்கம் பக்கத்தினர் பக்கத்து வீட்டு குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்ற விஷயத்தை கூற  அதெல்லாம் குழந்தைக்கு சரியாகிவிடும் என சொல்லி உள்ளே அழைத்துச் செல்கின்றனர்.

போன் போட்டு குழந்தை எப்படி இருக்கிறது என நலம் விசாரிக்கிறார்.அத்தோடு  மறுபக்கம் கௌரி மேடம் எல்லோரையும் அழைத்து அவர்களிடம் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பேப்பரை ஒன்றை கொடுத்து இது கொலையா அல்லது விபத்தா என கண்டுபிடிக்க சொல்ல எல்லோரும் ஒவ்வொரு பதிலை சொல்ல சந்தியா இது கொலைதான் என அதில் இருக்கும் நுணுக்கங்களை வைத்து உறுதியாக சொல்ல சரியான பதில் என கௌரி மேடம் பாராட்டுகிறார்.

அத்தோடு  சந்தியா காட்டுக்குள் கிடைத்த லெட்டரை கௌரி மேடம் கொடுக்க முயற்சி செய்ய ஒவ்வொரு முறையும் அப்துல் வந்து அதை தடுக்கும் வகையில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு அர்ச்சனா நேராக மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சிவகாமி மற்றும் மயில் என இருவரும் ஆஸ்பத்திரியில் அர்ச்சனாவை பார்த்து விடுகின்றனர்.

உடனே அர்ச்சனா லேசா தல சுத்துற மாதிரி இருந்தது அதனால டாக்டரை பார்க்க வந்ததாக பொய் சொல்ல சிவகாமி அது உண்மை என நினைத்து டாக்டரிடம் அழைத்துச் சென்று செக்அப் செய்ய டாக்டர் எதுவும் பிரச்சனை இருக்க மாதிரி தெரியல இருந்தாலும் ஒரு ஸ்கேன் எடுத்துவிடலாம் என சொல்ல அர்ச்சனா அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை, நான் ஏற்கனவே டாக்டரை பார்த்து மருந்து மாத்திரை வாங்கி விட்டேன் என வீட்டுக்கு வந்து விடுகிறார்.

இதன் பிறகு சந்தியா இந்த லெட்டர் எப்படி கௌரி மேடம் கொடுப்பது என யோசித்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் அப்துல் நான் கேம்பஸ் எதுவும் செய்யவில்லை ஜோதி கேம்பஸ் எப்படி ரிப்பேர் ஆனது என எனக்கு தெரியாது என்று சொல்கிறார். பிறகு சேட்டன் அங்கு வந்து எனக்கு என்னவோ அப்துல் சமூக விரோதி உளவாளியாய் இருக்கும்னு தோணுது, ஜோதிக்கு இதே சந்தேகம் இருக்கு என சொல்ல சந்தியாவும் தனக்குள்ளும் இதே சந்தேகம் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement

Advertisement