• Apr 20 2024

ஸ்ரீநிதியின் பதிவால் அதிர்ந்து போன அப்பா-என்ன கேட்டு இருக்கிறார் தெரியுமா..? தீயாய் பரவும் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7 சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீநிதி. இதன் பின்னர் யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடத்தே தனக்கென ஒரு இடததை பிடித்து பிரபலமானவர் தான் ஸ்ரீநிதி.

அண்மையில் நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனை தனது ஸ்ரோரியிலும் பதிவிட்டார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்தோடு சிம்புவைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என்றும் பதிவிட்டு மிரட்டியிருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீநிதியின் பதிவை பார்த்த அவரது அப்பா போனில் அவரது பதிவுக்களை மேற்கோள் காட்டி இது என்ன மகளே என கேட்டுள்ளார். எனினும் அதற்கு பதிலளித்துள்ள நடிகை ஸ்ரீநிதி, நான் சிம்புவை காதலிக்கவில்லை டாடி. சிம்பு தான் என்னை லவ் பன்றாரு, அவர்கிட்டேயே கேளுங்க என்ன டார்ச்சர் பண்றாரு, நான் பொய் சொல்ல மாட்டேன் தான’என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது அப்பாவுக்கு பதில் சொன்ன மெஸேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தும் ஷேர் செய்துள்ளார் நடிகை ஸ்ரீநிதி. ஸ்ரீநிதியின் இந்த பதிவு தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனிடையே தனது தோழியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு குடும்பத்தினர் பிடித்த வைத்திருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement