• Apr 19 2024

நடிகை மீரா மிதுன் செய்த ரகளையால் குற்ற புகார் விசாரணையை ஒத்தி வைத்த நீதி மன்றம்-

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாடல் அழகியாக அறிமுகமாகியவர் தான் மீரா மிதுன். இதன் மூலம் கிடைத்த புகழைக் கொண்டு சில திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இருப்பினும் விஜய், சூர்யா போன்ற நடிகர்களைப் பற்றி தவறாகப் பேசி சர்ச்சையிலும் சிக்கி வந்தார்.

தொடர்ந்து விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொணண்டு சேரன் தன்னுடன் தவறாக நடக்க முயற்சி செய்ததாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் பாதியிலேயே இந்த நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

இது தவிர தனது காதலனுடன் சேர்ந்து யூடியூப்பில் மோசமான வீடியோக்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருந்த இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் இவரின் பெயரில் பல அமைப்புக்கள் புகார் அளித்ததன் நிமிர்த்தம் கைது செய்யப்பட்டார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடைச் சட்டம், கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்காக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகிய இருவரும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நேற்று(22.6.2022) நீதிமன்றத்தில் ஆஜரான அவர்களிடம் குற்றப்பத்திரிகையை நீதிபதி படித்துக் காட்டியதோடு, அது தொடர்பாகக் கேள்வியும் எழுப்பியிருந்தார். இதற்கு தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகிய இருவரும் இது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளவதாக கூறியுள்ளனர். இதையடுத்து நீதிபதி வழக்கின் விசாரணையை அடுத்த மாதம்(ஜூலை) 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement