• Apr 25 2024

நடிகர் விஜய்க்கு எதிராக நடக்கும் சதித்திட்டங்கள்- வெளிப்படையாகப் பேசிய பிரபலம்- கொந்தளிக்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் புது புது வசூல் சாதனைகளை செய்து வருகின்றார்.அந்த வகையில் இவர் நடிப்பில் தற்பொழுது வாரிசு என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.


வம்சியின் இயக்கத்தில் இவர் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா நடிக்க தமன் இசையமைத்து வருகின்றார்.செண்டிமெண்ட் நிறைந்த குடும்ப படமாக உருவான இப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது.

அதே தினத்தில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் இரு படங்களும் பொங்களை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதியே திரையில் வெளியாகின்றது. இதைத்தொடர்ந்து இரு படங்களுக்கும் சமமான திரைகள் ஒதுக்கப்படும் என தகவல்கள் வர தற்போது விஜய் ரசிகர்கள் பெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


அதாவது பல திரையரங்கங்களில் துணிவு படம் பெரிய திரைகளிலும், வாரிசு படம் சிறிய திரைகளிலும் திரையிடப்படவுள்ளதாம். இதன் காரணமாக வாரிசு படத்திற்கு டிக்கெட் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகின்றதாம். மேலும் துணிவு படத்திற்கு நள்ளிரவு காட்சி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வாரிசு படத்திற்கு அதிகாலை காட்சி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாம்.


இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் இதுபற்றி பேசுகையில், விஜய்யின் படங்கள் முதல் நாளில் மிகப்பெரிய வசூலை ஈட்டி சாதனை படைத்து வருகின்றது. அதனை தடுக்கவே இதுபோன்ற செயல்கள் நடந்து வருகின்றது.சொல்லப்போனால் விஜய்க்கு எதிராக பெரிய சதிகள் நடந்து வருகின்றது என்றார். இந்நிலையில் இதையும் மீறி வாரிசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறும் என விஜய் ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement