• Mar 29 2024

மகன்களுக்காக பிறந்தநாள் பிளானை மாற்றிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா இந்த ஆண்டு ஜுன் மாதம் தனது காதன் விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதனை அடுத்து கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தமக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளளதாக அறிவித்திருந்தனர்.பல சர்ச்சைகளின் பின்னர் இந்த குழந்தை விவகாரம் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது.அத்தோடு குழந்தை பிறந்ததில் இருந்து இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.


தனது பிஸியான ஷெட்யூல்களுக்கிடையே, மகன்களுடன் நேரம் செலவிடுவதில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் வரும் நவம்பர் 18-ஆம் தேதியோடு நயன்தாராவுக்கு 38 வயதாகிறது. இதையடுத்து அவர் இந்த முறை வித்தியாசமான கொண்டாட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

கடந்த சில வருடங்களாக நயன், தனது பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடி வருகிறார். இந்த முறை தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்களுடன் வீட்டில் பிறந்தநாளை கொண்டாடவுள்ளதாக கூறப்படுகிறது.


திருமணத்திற்குப் பிறகு வரும் தனது முதல் பிறந்தநாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடவிருக்கும் நயன்தாரா, நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைக்க திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement