• Apr 20 2024

10 ஏக்கர் பரப்பளவில் புதிய படப்பிடிப்புத்தளத்தை நிறுவிய அல்லு அர்ஜுன்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் இயக்குநர்  சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் புஷ்பா. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலிலும் அள்ளிக் குவித்தது.குறிப்பாக பாலிவூட் சினிமாவில் இப்படம் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.  இதனால் இப்போது இந்தியா முழுவதும் அறியப்படும் நபராகி உள்ளார் அல்லு அர்ஜுன்.


இவர்கள் குடும்பமே திரைப்பட தொழிலின் பல்வேறு பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஆஹா ஓடிடி ஆகியவை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் உடையதுதான்.

 இந்நிலையில் இப்போது அல்லு அர்ஜுன் ஆந்திராவில் 10 ஏக்கர் பரப்பளவில் ‘அல்லு ஸ்டுடியோஸ்’ எனும் படப்பிடிப்புத் தளத்தை நிறுவியுள்ளார். அக்டோபர் 1 ஆம் தேதி அவரின் தாத்தாவின் பிறந்தநாளின் போது இந்த ஸ்டுடியோ திறக்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement