• Apr 19 2024

பெண் குழந்தையை பெற்றெடுத்த ஆலியா பட்-ரன்வீர் கபூர் தம்பதியினர்... குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாத் திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஆலியா பட். இவர் கடந்த சில வருடங்களாக பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை மனப்பூர்வமாக காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய திருமண நிகழ்வானது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் மிகப் பிரமாண்டமாக நடந்தது. 


மேலும் இவர்களுடைய திருமணத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்த நிலையில், திருமணம் ஆன இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார் ஆலியா. அதாவது திருமணத்திற்கு பின்னர் எந்த திரைப்பட வாய்ப்புகளையும் ஏற்காத ஆலியாபட் திருமணத்திற்கு முன்பே 2 மாதம் கர்ப்பமாக இருந்தார்.

திருமணத்திற்கு பின்னர் அவ்வப்போது தன்னுடைய கணவருடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக உலா வருவதை வழக்கமாக வைத்திருந்த ஆலியா பட், சில பிரக்னன்சி போட்டோ ஷூட்களையும் நடத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


இந்நிலையில் ஆலியா பட்டிற்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், சற்று முன்னர் இந்தத் தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் உட்படப் பலரும் இந்த நட்சத்திர ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement