• Apr 24 2024

இந்த நரிக் கூட்டத்தோட வாழுறதுக்கு வெளிய வந்து வாழலாம்- திடீரென மனம் மாறிய ராபர்ட் மாஸ்டர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதமான நிலையில் தற்பொழுது 5 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.ஏகப்பட்ட சண்டைகள் மற்றும் அதே வேளையில் கலகலப்பான விஷயங்கள் கூட அவ்வப்போதும் அரங்கேறி வருகிறது.

கடந்த வாரங்களில் நடைபெற்ற பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க் உள்ளிட்ட இரண்டு டாஸ்க்குகள் காரணமாக போட்டியாளர்கள் மத்தியில் சண்டை வெடித்திருந்தது. ஹவுஸ்மேட்டுக்கான சிறந்த அறிவுரைகளை கமல்ஹாசன் வழங்கியும் வருகின்றார்.


அந்த வகையில் இந்த வாரம்  நாமினேஷன் பட்டியலில், அசீம், ஆயிஷா, தனலட்சுமி, கதிரவன், குயின்சி, நிவாஷினி, ராபர்ட், கதிரவன் மற்றும் ஜனனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அப்படி ஒரு சூழலில், கேமராவை பார்த்து ராபர்ட் மாஸ்டர் பேசிய விஷயங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

அப்போது பேசும் ராபர்ட் மாஸ்டர், "இந்த நரிக் கூட்டத்தோட வாழுறதுக்கு வெளிய வந்து வாழலாம். இத வந்து மக்களுக்கு சொல்றேன். இவங்க வேணாம்ன்னு சொல்லி வெளிய அனுப்புறாங்க. நமக்கு வெளிய நிறைய வேலை இருக்கு. தயவு செஞ்சு காப்பாத்திடாதீங்க. லவ் யூ" என கூறி உள்ளார்.


நாமினேஷன் பட்டியலில் ராபர்ட் மாஸ்டர் இடம்பெற்றுள்ள நிலையில், தன்னை காப்பாற்ற வேண்டாம் என கேமரா முன்பு அவர் பேசியுள்ள விஷயம், பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement