• Apr 25 2024

சென்னை எப்பொழுதும் எனக்கு ஸ்பெஷல் தான் - ஓபனாகப் பேசிய நடிகை ஸ்ரேயா

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சந்துரு இயக்கத்தில்  உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் இணைந்து நடிக்கும் பான் இந்தியப் பிரமாண்ட திரைப்படம் "கப்ஜா". உலகம் முழுவதும் மார்ச் 17 வெளியாகவுள்ளது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரேயா சரண் கூறியதாவது.., "சென்னை எப்பொழுதும் எனக்கு ஸ்பெஷலாக தான் இருக்கும். இந்த கப்ஜா என்ற எனது மனதிற்கு நெருக்கமான ஒரு படத்துடன் நான் இப்போது மீண்டும் வந்திருக்கிறேன். இந்த படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் சந்துரு அவர்களுக்கு நன்றி.


 உபேந்திரா சார் போன்ற ஒரு அற்புதமான நடிகருடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. மார்ச் 17 அன்று படம் வெளியாக இருக்கிறது. உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்று தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து பேசிய உபேந்திரா இந்த படத்தை வெளியிடப் போகும் லைகா புரொடக்‌ஷன்ஸ், GKM தமிழ் குமரன் மற்றும் சுபாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே, இது தொழில்நுட்ப கலைஞர்களின் படம் என்று உங்களுக்குத் தெரிந்து இருக்கும். இயக்குநர் சந்துருவின் நான்கு வருடக் கனவு இது. 


அவருடைய பெருங்கனவு இந்த படத்தின் டிரெய்லரில் தெரிகிறது. இந்த படத்தில் கிச்சா சுதீப், சிவராஜ்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருக்கின்றனர். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. கூடிய சீக்கிரம் இங்கு நேரடியாக ஒரு தமிழ்த் திரைப்படம் பண்ண ஆவலாக இருக்கிறேன். படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்றும் தெரிவித்தார். "

Advertisement

Advertisement

Advertisement