• Apr 20 2024

மணிமேகலை விலகல் குறித்து உண்மையை போட்டுடைத்த செஃப் தாமு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பல ரசிகர்களைக் கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.இதில் கோமாளியாக சிறப்பித்து இருந்தவர் தான் மணிமேகலை.

இவ்வாறுஇருக்கையில்  மணிமேகலை இரண்டு வாரங்களுக்கு முன்பு  குக்வித்கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார்.இவ் நிகழ்ச்சி குழு உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் அவர் வெளியேறினாரா என குழப்பமும் நிலவியது.

இருப்பினும் மணிமேகலை தான் வெளியே போனது ஏன் என்கிற காரணத்தை வெளிப்படையாக பேசவில்லை. அத்தோடு அவர் கிராமத்தில் வாங்கி இருக்கும் நிலத்தில் ஒரு பெரிய farm ஹவுஸ் கட்ட போவதாக அறிவித்து அதன் பூஜை புகைப்பங்களை வெளியிட்டு இருக்கிறார் அவர்.

இந்நிலையில் குக் வித் கோமாலி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் தாமு அளித்த பேட்டியில் "மணிமேகலை எனக்கு மகள் போன்றவர். அவர் நிகழ்ச்சியை  விட்டு போனது எங்களுக்கு loss தான்.அவரது காமெடியை அதிகம் நான் மிஸ் செய்கிறேன்."

"இது அவரது விருப்பம். அடுத்து anchor போன்ற விஷயத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் என நினைக்கிறேன். அவரது எதிர்காலம் ரொம்ப முக்கியம். அதனால் எடுத்த முடிவு தான் இது" என தாமு கூறி இருக்கிறார். 






Advertisement

Advertisement

Advertisement