தன் மனைவி மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற பிரபல தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தி படங்களை தயாரித்து வருபவர் கமல் கிஷோர் மிஸ்ரா. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கும் அந்தேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் பார்க்கிங் பகுதியில் காருக்குள் வேறு ஒரு பெண்ணுடன் இருந்திருக்கிறார் மிஸ்ரா.
எனினும் இதை பார்த்த அவரின் மனைவி தட்டிக் கேட்கவே காரை ஏற்றி அவரை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார். மிஸ்ரா காரை ஏற்றியதில் அவரின் மனைவிக்கு காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அங்கிருந்த ஒருவர் உதவிக்கு ஓடி வந்தார்.இந்த காட்சிகள் பார்க்கிங் பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவானது.மேலும் அந்த வீடியோ பதிவு வெளியாகி பார்ப்பவர்களை ஷாக்கடைய வைத்திருக்கிறது.
அக்டோபர் 19ம் தேதி தான் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்திருக்கிறது. எனினும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கிஷோரின் மனைவி. அத்தோடு அவரின் புகாரின்பேரில் கமல் கிஷோர் மிஸ்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தன் புகார் மனுவில் திருமதி மிஸ்ரா தெரிவித்திருப்பதாவது...
என் கணவரை காணவில்லையே என்று தேடி வந்தேன். பார்க்கிங் பகுதியில் காருக்குள் வேறு ஒரு பெண்ணுடன் இருந்தார் அவர். இது சரியானு கேட்டதற்கு என் மீது காரை ஏற்றி கொல்லப் பார்த்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.அத்தோடு கமல் கிஷோர் மிஸ்ரா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறது.
Mumbai: FIR registered against filmmaker Kamal Kishor Mishra for allegedly ramming his car into his wife after she spotted him with another woman in the vehicle, say police pic.twitter.com/DeUa1YP1Xu
Listen News!