• Apr 19 2024

அந்தப் பெண்ணை துரத்தி விடுங்க – சூட்டிங் ஸ்பாட்டில் அர்ணவிடம் ரசிகைகள் ஆவேசம்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர்  சமூகவலைத்தளத்தில்  முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது அர்னவ்-திவ்யா விவகாரம் தான். சமீபத்தில் தான் செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ்வும், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் ரகசியமாக திருமணம் செய்து இருந்தனர்.மேலும்  இவர்கள் இருவரும் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்து இருந்தார்கள்.

இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக சீரியல் நடிகை திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருந்தார்.அத்தோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார். மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்து இருந்தார்.

மேலும், அர்னவ் செல்லமா சீரியல் நடிகை உட்பட பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை வெளிக்காட்டினார் திவ்யா. அத்தோடு திவ்யா கொடுத்த புகாரின் பெயரில் அர்னவ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார்.எனினும்  தற்போதும் தொடர்ந்து செல்லம்மா தொடரில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க இந்த தொடரில் மேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்த திவ்யா கணேஷ் சமீபத்தில் வெளியேறினார்.

இந்த தொடரில் தன்னை வேலை செய்ய முடியாமல் தடுத்ததாகவும் இதனால் தான் சீரியலில் இருந்து விலகிவிட்டதாகவும்  தெரிவித்து இருந்தார் திவ்யா.  கதைப்படி திருமணம் ஆகி ஒரு குழந்தையுடன் கஷ்டப்பட்டு வரும் செல்லம்மாவை தான் சீரியல் நாயகன் அர்னவ் காதலித்து வருகிறார்.

சித்து தன்னை காதலிக்கிறார் என்று தெரிந்து கொள்ளும் செல்லம்மா அவரை விட்டு விலகிச் சென்று விடுகிறார். ஆனாலும், செல்லம்மாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சித்து உறுதியாக இருக்கிறார்.அத்தோடு சீரியலின் வில்லியாக இருக்கும் மேகாவுடன் சித்துவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் மேகாவுக்கும் சிந்துவிற்கும் திருமணம் நடக்குமா இல்லையா என்று இந்த தொடர் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறுஇருக்கையில் சீரியலின் சூட்டிங்க் நடக்கும் இடத்தில் சில பெண் ரசிகைகள் அர்ணவை சந்திக்க வந்திருக்கின்றனர். அதில் அவர்கள் நீங்க எப்போ செல்லமாவை கல்யாணம் செய்து கொண்டு அந்த குழந்தையை உங்களோடு வைத்துக் கொள்ளப் போகிறீர்கள். அதேபோல அந்த மேகாவை துரத்தி விட்டுருங்க, அப்போதான் சீரியல் நல்லா இருக்கும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் அங்கிருந்த ஒரு ரசிகர் உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதே அது எதற்காக? என்று யோசித்து யோசித்து எங்களுக்கு தலைவலி வந்து விடும் போல என்று கேலியாக பேசி இருக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement