• Apr 25 2024

நடிகை தீபாவின் தற்கொலையில் லீக்கான சிசிடிவி காட்சி - சிக்கிய நபர்..தீவிர விசாரணையில் போலீசார்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகை தீபா, தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

துணை நடிகையான தீபா, விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு வயது 29.இவர் சனிக்கிழமை வீட்டின் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தீபா என்கிற ஜெஸிகா பவுலின். மேலும் இவர் விஷாலின் துப்பறிவாளன் படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 29 வயதான தீபா, தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார்,உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர்.



இதையடுத்து, போலீசார் வீட்டில் மேற்கொண்ட சோதனையில், தீபா தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம்  ஒன்றும் கிடைக்கப்பெற்றது. அந்த கடிதத்தில், உயிருக்கு உயிராக தாம் ஒருவரை காதலித்ததாகவும், அந்த காதல் நிறைவேறாததால் உலகத்தைவிட்டு செல்வதாகவும், தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், காதலன் சிராஜுதினிடம் தீவிரமாக விசாணை நடத்தி வருகின்றனர்.

தீபாவின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் தற்கொலைக்கு முன் சிராஜுதினிடம் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அத்தோடு  தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அவர் காதலரிடம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், நடிகை தீபாவின் குடியிருப்பருகே உள்ள சிசிடிவியை கைப்பற்றி ஆய்வு செய்த போலீஸார், அவரது வீட்டிற்கு யார், யாரெல்லாம் வந்து சென்றுள்ளனர் என்ற தகவல்களையும் சேகரித்து உள்ளனர்.



அத்தோடு  அவர் தற்கொலை செய்து கொண்ட தகவலை காதலன் சிராஜுதீன் மூலமாக தெரிந்து கொண்ட அவரது நண்பர் பிரபாகரன் நடிகை தீபாவின் வீட்டிற்கு பதற்றத்தோடு ஓடிவரும் சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சிராஜுதீன் அவரது நண்பர் பிரபாகரன் ஆகியோர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றார்களாம்.



நடிகை தீபாவின் காதலன் சிராஜுதீனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தை இருக்கும் நிலையில், அவர் தீபாவுடன் பழகி உள்ளார் என தெரியவந்துள்ளது.இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிந்து நடிகை தீபாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement