• Apr 25 2024

''விஜய் -அஜித் 2 பேருமே என் மகன்கள் தான்''...ஷோபா ஷேரிங்ஸ் ஓபன் டாக்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய வாரிசு திரைப்படமானது, பொங்கல் ஸ்பெசலாக வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கிய்ள்ளார்.

இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். மேலும்  பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். 


 அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் H வினோத்துடன் துணிவு திரைப்படம் மூலம் இணைந்துள்ளார் நடிகர் அஜித். 

அதே போல, இந்த மூன்று படங்களையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துணிவு படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.



அஜித் மற்றும் விஐய் என இரண்டு பெரிய நட்சத்திரங்களின் திரைப்படம் பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் ஆகி உள்ளதால் இருவரின் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் திகழ்கிறார்கள்.

இந்நிலையில்  சேனல் ஒன்றுக்கு  பிரத்தியேக பேட்டி ஒன்றினை  நடிகர் விஜய்யின் அம்மா, ஷோபா சந்திரசேகர் அளித்திருந்தார்., “ரெண்டு நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது இண்டஸ்ட்ரிக்கு நல்லது. அவர்களது ரசிகர்களுக்கு சந்தோஷம், நான் துணிவு படமும் வெற்றிபெற வேண்டும் என்றுதான் கோயிலில் வேண்டிக்கொண்டேன்.



என்னை பொறுத்தவரை அஜித், விஜய் இருவருமே என் மகன்கள் தான். இருவருக்குமே நான் ரசிகை தான். அஜித்தை தனியாக நான் பிரித்து பார்த்ததில்லை. அஜித்துக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இருவருமே நல்ல குடும்ப நண்பர்கள். ஷாலினி எங்களுடன் நல்லுறவில் இருக்கிறார். அவ்வப்போது இருவரது குடும்பமும் டின்னர் பார்ட்டியில் சந்தித்துக் கொள்வார்கள். நான் ரெகுலாராக வாக்கிங் போகும்போது ஷாலினியை, சில சமயம் அஜித்தை பார்ப்பேன்.என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கத்து.

அவரது திருமண பத்திரிகை கொடுக்கவந்தபோது என்னிடம் மிகவும் அன்பாக பேசிக்கொண்டிருந்தார். நான் கண்டிப்பாக வந்து ஆசீர்வாதம் பண்ண வேண்டும் என சொல்லி அன்போடு அழைத்தார்.” என்பதையும் சந்தோஷத்துடன் பகிர்ந்துகொண்டிருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement