• Apr 20 2024

'சிங்கம் 4' படத்தை வைத்து... சூர்யா-ஹரியை வம்பு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்... கடுப்பான ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகவும், பெண்களின் கனவுக் கண்ணனாகவும் வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் எந்தப் படம் உருவானாலும் அந்தப்படம் வெற்றிப்படம் தான் என்று கூறுமளவிற்கு திறம்பட நடிக்க கூடியவர். 

அந்தவகையில் சூர்யா-ஹரி கூட்டணி இணைந்த 'ஆறு, வேல்' ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியை எட்டியிருந்தன. அதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் திரைப்படம் 2010ம் ஆண்டு மாஸாக வெளியானது. 


இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், விவேக், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இப்படமானது ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதாவது 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் சுமார் 90 கோடி வரை வசூலித்து மரண மாஸ் காட்டியது. 

இதனைத் தொடர்ந்து சூர்யாவின் கேரியரில் சிங்கம் ஒரு மாஸ் ஹிட் படம் என ரசிகர்கள் இன்றுவரை கொண்டாடினர். இவ்வாறாக சிங்கம் சூப்பர் ஹிட் அடித்ததால் அப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க முடிவு செய்தார் ஹரி 'சிங்கம்-2', 'சிங்கம்-3' ஆகிய படங்களை எடுத்தார். ஆனால் சிங்கம் முதல் பாகம் அளவிற்கு அடுத்து வெளியான இரண்டு பாகங்களும் வெற்றி பெறவில்லை. 


இந்நிலையில் தற்போது சிங்கம் படத்தின் 4ம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது. மேலும் இதற்கான கதையை ஹரி தயார் செய்துவருவதாகவும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தற்போது இதுகுறித்து ட்வீட் செய்துள்ள விமர்சகரான ப்ளு சட்டை மாறன் பல கருத்துக்களை கூறியுள்ளார்.


அதாவது "2010ல் வெளியான சூர்யாவின் சிங்கம் திரைப்படம் தான் அவருக்கு ரியலான ஹிட் கொடுத்தது என்றும், அதன்பிற்கு அப்படியொரு ஹிட் படத்தை இதுவரைக்கும் ஹரி கொடுக்கவில்லை எனவும்" கூறியுள்ளார். மேலும் "சிங்கம் 4ம் பாகம் உருவானால், சூர்யாவும் ஹரியும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு தரமான வெற்றியை கொடுக்க முயற்சிக்க வேண்டும்" எனவும் பதிவிட்டுள்ளார்.


இதனைப் பார்த்ததும் சூர்யா ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். அதாவது சிங்கம் 4ம் பாகம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அப்படி இருக்கையில் சூர்யா, ஹரி இருவரிடமும் ப்ளு சட்டை மாறன் வம்பிழுத்துள்ளது ரசிகர்களை பயங்கரமாக கோபம் அடைய செய்துள்ளது. 

அதுமட்டுமல்லாது சிங்கம் படத்துக்குப் பிறகு சூர்யா வேற ஹிட்டே கொடுக்கவில்லையா, ப்ளு சட்டை மாறன் மனசாட்சி இல்லாமல் இப்படி சொல்லலாமா எனவும் ரசிகர்கள் கேட்டு அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement