பிக்பாஸ் சீசன் 6 ஆனது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டதால் ஹவுஸ்மேட் அடிக்கடி தமக்குள்ளே மோதிக் கொள்கின்றனர். அத்தோடு கடுமையான வார்த்தைப் பிரயோகத்தை போட்டியாளர்கள் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து பிக்பாஸ் வனிதா கூறிய விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதாவது இது பிக் பாஸ் வீடா இல்ல பார்க்கா..பீச்சானு தெரியாத அளவுக்கு ஜோடி ஜோடியா இருக்காங்க, எதுக்கு தைரியம் இருக்கோ.. இல்லையோ இந்த விஷயத்தில் அனைவரும் தைரியமாக இருக்குற மாதிரி தெரிகிறது. குறிப்பா ராபர்ட் மாஸ்டரை பார்த்து ரச்சிதா ஹாலிவுட் ஹீரோ என்பதும், அவரு ரச்சித்தாவை செல்லமா 'முக்குத்தி' என்று வர்ணித்துகிட்டே இருக்கிறார்.
அதேபோல, நிவாஷினி மற்றும் அசல் ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமாக இருக்கிறார்கள். இதுவீட்டில் இருப்பவர்களுக்கு சங்கடத்தை கொடுக்கும், ஆனால் இருவரும் நண்பர்கள் என்கிறார்கள். உண்மையில் இவர்கள் நண்பர்கள் தானே என்பது போகப்போகத்தான் தெரியும். இருந்தாலும், அசல் சில நேரங்களில் பெண்களிம் வரம்பு மீறி நடந்து கொள்கிறார் என்றார்.
அதேபோல, மகேஸ்வரி இந்த சீசனின் ஸ்டாங்கான போட்டியாளர் அவர் அழுது கொண்டே இருந்தது எனக்கு பிடிக்கவில்லை. அவர் ஸ்டாங்காக இருப்பதால் தான், மற்ற போட்டியாளர்கள் அவரை வெளியில் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால் மகேஸ்வரி கவனத்தை விளையாட்டில் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் முக்கியமாகும்.
Listen News!