• Apr 19 2024

கதிரை விளாசும் பிக் பாஸ் ரசிகர்கள்-இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 9ஆம் தேதி ஆரம்பமாகி  நான்காவது வாரம் நடைபெற்று வருகின்றது.இதில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் யார் எவிக்சன் ஆகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அசீம், தனலட்சுமி, ஆயிஷா, மகேஷ்வரி, ஜனனி, விக்ரமன், அமுதவாணன் ஆகியோர் ஒவ்வொரு வாரமும் லைம் லட்டில் வந்துவிடுகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில்  பிக் பாஸ் வீட்டில் கதிர் எப்போதுமே எந்த பிரச்சினைகளிலும் தலையிடாமல் இருப்பதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்

பிக் பாஸ் சீசன் 6ல் முதல் வாரத்தில் இருந்தே கவனம் ஈர்த்து வருபவர் கதிர். அத்தோடு முதல் இரண்டு வாரங்களில் எவிக்ஸன் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்து தப்பிய கதிர், இந்த வாரம் சக போட்டியாளர்களால் டார்க்கெட் செய்யப்பட்டுள்ளார்.மேலும் அதிகம் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்த போதும், கதிர் எப்போதும் அமைதிப்படையாகவே இருப்பது மற்ற போட்டியாளர்களை யோசிக்க வைத்துள்ளது. யாரிடமும் எந்த பிரச்சினையும் செய்யாமல் எப்பவுமே Safe ஆக இருந்துவிட்டால் போதும் நினைத்து கதிர் கேம் ஆடுகிறார் என சென்ற வாரமே புகார்கள் எழுந்துவிட்டன.

முக்கியமாக இரண்டாவது வாரத்தில் நடந்த பொம்மை டாஸ்க்கில் நிலைமை படுமோசமானது. அசீம், ஆயிஷா, ஷெரினா ஒரு டீமாகவும், அமுதவாணன், ஜனனி, தனலட்சுமி, ஷிவின் இன்னொரு பிரிவாகவும் மோதிக் கொண்டனர்.மேலும் இவர்கள் நடுவில் விக்ரமன், மகேஷ்வரி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோரும் என்ட்ரியாகி பெரிய கலவரமே நடந்தது. ஆனால், இது எல்லாவற்றையும் கதிர் ஒரு ஓரமாக அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தார். இதை கடந்த வாரம் அகம் டிவி வழியே பேசிய கமல்ஹாசனே கதிரிடம் சுட்டிக் காட்டி கொஞ்சம் சாஃப்ட்டாக கண்டனம் தெரிவித்தார்கள்.

ஆனாலும், கதிர் இன்னும் மாறவில்லை என்பதை கடந்த மூன்று தினங்களாக பார்க்க முடிகிறது.அத்தோடு  இந்த வாரம் எவிக்‌ஷன் நாமினேஷன் லிஸ்ட்டில் கதிரையும் கோர்த்துவிட்டனர் சக போட்டியாளர்கள். அப்படி இருந்தும் கடந்த இருநாட்களாக நடக்கும் டாஸ்க்கில் அசீம் - தனலட்சுமி, அசீம் - மகேஷ்வரி, ராபர்ட் மாஸ்டர் - தனலட்சுமி ஆகியோரிடையே மோதல்கள் ஏற்பட்டன. 

அதேபோல், அந்த டிவி, இந்த டிவி டாஸ்க்கிலும் விக்ரமன் - மகேஷ்வரி, விக்ரமன் - மைனா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், இது எதற்கும் தனது பக்கம் நியாயம் என்ன, எது சரி எது தவறு என எதையுமே சொல்லாமல் யாரையும் சமாதானமும் செய்யாமல் அமைதி காக்கிறார் கதிர்.அத்தோடு  அவர் மீது இப்போது பிக் பாஸ் ரசிகர்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த வாரம் கதிர் தான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement