• Mar 29 2024

நான் அதற்காக 2.5 லட்சம் கொடுத்திருக்கேன்... ராம் கூறியதைக் அதிர்ச்சியடைந்த பிக்பாஸ் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-ஆவது சீசன் ஆனது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 19 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மறுபுறம் ஜிபி முத்து பாதியிலேயே வெளியேறினார். அதேபோல் இந்த வாரம் அசல் கோளார் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


அதிகளவு ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்ட இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனதற்கு முக்கியமான ஒரு காரணம் நடிகை ஓவியா தான். ஏனெனில் முதல் சீசனில் அவர் கலந்துகொண்டபோது முன்னணி நடிகர், நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ஓவியாவுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவானது. 

அதுமட்டுமல்லாது அந்நிகழ்ச்சியின் போது ஓவியாவுக்கு ட்விட்டரில் ஆர்மியெல்லாம் தொடங்கி ரசிகர்கள் அதகளப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, அதாவது அந்த சீசனுக்கு பின்னர் அடுத்தடுத்த சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருக்குமே ஆர்மி உருவாக்கினர். 

இருப்பினும் ஓவியாவுக்கு கிடைத்த அளவுக்கு அதன் மூலம் யாருக்கும் பாப்புலாரிட்டி கிடைக்கவில்லை. இதற்கான முக்கிய காரணம் என்னவெனில் போட்டியாளர்கள் பலரும் பணம் கொடுத்து தங்களைப் பற்றி ப்ரமோஷன் செய்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.


இதுபற்றி இதுவரை காலமும் எந்த ஒரு போட்டியாளரும் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள ராம், தான் புரமோஷனுக்காக ரூ.2.5 லட்சம் செலவழித்துள்ளதாக சக போட்டியாளர்களிடம் தெரிவித்துள்ளது ரசிகர்கள் பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

அதாவது குயின்ஸி உடனான அந்த உரையாடலின் போது இதனை தெரிவித்த ராம், ஏற்கனவே இந்நிகழ்ச்சியில் நிறைய பேருக்கு ப்ரமோஷன் செய்தவர்களிடம் தான் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். ராம் இவ்வாறு கூறியதை வைத்துப் பார்க்கும்போது முந்தைய சீசன் போட்டியாளர்களும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரிகின்றது.

Advertisement

Popular articles

Advertisement

Advertisement

Advertisement