• Apr 20 2024

பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா..? வெளியேறப்போவது யார்..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில்  மிகவும் பேமஸ் ஆனது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார். அதேபோல் இரண்டாவது சீசனில் ரித்திகாவும், மூன்றாவது சீசனில் முகேன் ராவ்வும் டைட்டிலை தட்டித்தூக்கினர். கடைசியாக நடந்து முடிந்த 4 மற்றும் 5-வது சீசனில் ஆரி மற்றும் ராஜூ ஆகியோர் முதலிடம் பிடித்து டைட்டில் வின்னர் ஆகினர்.

எனினும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய  இந்நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். தற்போது 50 நாட்களைக் கடந்துவிட்டபோதும் போட்டி சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக கடந்த வாரமே கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் கூறி இருந்தார்.



இதனால் இந்த வாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷில், வீட்டில் எந்தவித வேலையும் செய்யாமல், ஜாலியாக சுற்றிவரும் போட்டியாளர்களை டார்கெட் செய்து, அவர்களை நாமினேட் செய்தனர். அந்த வகையில் இந்த வார நாமினேஷனில் ரச்சிதா, மைனா, குயின்சி, ஜனனி, கதிரவன், தனலட்சுமி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இதில் மைனா, குயின்சி மற்றும் கதிரவன் தான் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.இவ்வாறுஇருக்கையில் திடீரென ஒரு தகவல் வெளியாகி உள்ளது.அது என்னவென்றால் இந்த வாரம் டபிள் எவிக்சன் உள்ளது எனக் கூறப்பட்ட நிலையில் அது பொய்யாத தகவல் என தற்போது வெளியாகி உள்ளது.அது வெறும் வதந்தி எனக் கூறப்படுகின்றது.இதில் யார் இந்த வாரம் வெளியேறப்போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement