• Mar 29 2024

திடீரென ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அமீர் மற்றும் பாவனி- அடடே சூப்பர்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாவனி. இவர் திருமணம் ஆன சில மாதத்திலேயே தன்னுடைய காதல் கணவரை இழந்தவர். இதன் பின்னர் மீண்டும் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வந்த நிலையில், அந்த காதலும் தோல்வியில் முடிந்தது. இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய போது, வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த அமீர் திடீர் என பாவனியிடம் காதலை கூறியது, செயற்கையாகவே பார்க்கப்பட்டது. மேலும் அமீர் பாவனியை விட வயதில் சிறியவர் என்பதால் அவரது காதலை ஏற்க மறுத்துவிட்டார் பாவனி.


பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் விஜய் டிவி இவர்களை பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சி மூலம் ஒன்று சேர்த்து. இவர்கள் இருவருமே காதல் உணர்வோடு நடனம் ஆடியதால் இவர்கள் இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி வேற லெவலுக்கு ஒக்கவுட் ஆனது. 


இந்நிலையில், சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 பைனல் போட்டி நடந்த போது , இதில் அமீர் - பாவனி ஜோடி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. இதற்க்கு ஒரு புறம் ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வர, ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திருமணத்திற்கும் தயாராகி உள்ளனர். இதனை பாவனி கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் வெளிப்படுத்தினார்.


இது தவிர தற்பொழுது படவாய்ப்பினைப் பெற்று நடித்து வரும் இருவரும் வருகின்ற பெப்ரவரி மாதம் 15ம் திகதி திருமணம் செய்து கொள்ளப் போவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்.இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement