• Apr 25 2024

கதறி அழும் பாரதி.. வெண்பாவுக்கு தாலி கட்ட போன ரோகித்- பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

எல்லோரும் பாரதியை நிற்க வைத்து  தாறுமாறாக கேள்வி கேட்கின்றனர். அன்னைக்கு ஹாஸ்பிடலில் தீவிரவாதிகள் பாம் கட்டி தொங்கவிட்டபோது கண்ணம்மா உயிரை பணயம் வைத்து உன்னை காப்பாற்றினான். பழையதை மறந்து விட்டு அவளுடன் சேர்ந்து வாழ எல்லோரும் கெஞ்சியும் நீ முடியாது என கூறிவிட்டாய். ஆனா இப்போ வெண்பாக் கழுத்துல தாலி கட்ட வந்திருக்காய்  இதுக்கு பேரு என்ன என கேட்க பாரதி பதில் சொல்ல முடியாமல்  தவித்து நிற்கிறார்.

ஒவ்வொருத்தரும் நீ எனக்கு புள்ளையே இல்ல அண்ணனே இல்ல என பாரதியை திட்டி தீர்க்க அப்போது வரும் லட்சுமி, ஹேமா உங்களை பார்த்தாலே புடிக்கல ஐ ஹேட் யூ என சொல்லி விடுகின்றனர். 


இன்னும் எவ்வளவு பொய்தான் என்கிட்ட கூற  போறீங்க இனிமே என்கிட்ட பேசாதீங்க நான் உங்கள டாடி என்று கூப்பிட மாட்டேன் நீங்களும் என்னை பேர் சொல்லி கூப்பிடாதீங்க என ஹேமா அதிர்ச்சி கொடுத்து கண்ணம்மாவை இழுத்துக் கொண்டு வெளியே சென்று விடுகிறார். அத்தோடு எல்லோரும் என் முகத்திலேயே முழிக்காத என கூறிவிட்டு வெளியே போக பாரதி தனி மரமாக தவித்து நிற்கிறார்.

இதன் பிறகு வெண்பா பாரதி என பேச வர பேசாத இனிமே என் முகத்திலேயே முழிக்காத உன்னால நான் நடுத்தெருவுல நிற்கிறேன் என கோபப்பட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.இதன்  பிறகு இனிமே உன்னை யாரு கட்டிக்கவா என ஷர்மிளா கண்கலங்க நான் இருக்கேன் என ரோகித் குரல் கொடுக்கிறார். அத்தோடு வெண்பா மேல நான் உயிரையே வச்சிருக்கேன், அவ வயித்துல வளர்வது என்னுடைய குழந்தை என கூறி தாலி கட்ட தயாராகிறார்.


பின்னர்  ரோஹித்தின் அம்மா அவ உன்ன ஏமாத்திட்டு போனவ அவ வேண்டாமென கூற ஒரு வழியாக அம்மாவையும் சம்மதிக்க வைத்து வெண்பா கழுத்தில் தாலி கட்ட போக கடைசி நொடியில் ஸ்டாப்பிட் ரோகித் என நிறுத்துகிறார் வெண்பா. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement