• Mar 29 2024

ஹேமாவிடம் பேச போன பாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி- திட்டித் தீர்த்த கண்ணம்மா- பாரதி கண்ணம்மா எப்பிஷோட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் பாரதியின் கணபதியின் பசியில் துடித்து வயிற்றில் ஈரத் துணியை கட்டிக்கொண்டு தூங்கும்போது திடீரென பாரதி காலை யாரோ தொட்டது போல இருக்க பாரதி கணபதியை எதுக்கு எழுப்பீங்க என கேட்க கணபதி நான் எழுப்பல ஒருவேளை மோகினியாக இருக்குமோ என பயத்தை கிளப்ப பின்னர் பக்கத்தில் இருந்த மேசையின் மீது சாப்பாடு தட்டு இருப்பதை பாரதி கவனிக்கிறார்.

சாப்பாட்டை பார்த்ததும் பாரதி பசியில் சாப்பிட இது கண்ணம்மாவின் கைப்பக்குவம் ஹேமா தான் கொண்டு வந்து வைத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொள்ள இருவரும் சாப்பிடுகின்றனர். மறுநாள் காலையில் ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கப்படும் என கணபதி மைக்கில் பேச யாரும் சிகிச்சை பார்க்க வராமல் இருக்கின்றனர்.


அப்போது ஒருவருக்கு பாம்பு கடித்து விட்டதாக மக்கள் அனைவரும் பதற பாரதி சிகிச்சை பார்க்க ஓடி வர ஊர் மக்கள் அவர் செத்தாலும் சாகட்டும் என விடுவோம் ஆனால் உங்களிடம் வைத்தியம் பார்க்க மாட்டோம் என அவரை வெளியூருக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இதனால் மன வருத்தத்துடன் பாரதி சேரில் வந்து அமர அப்போது அங்கு ஒரு லெட்டர் இருப்பதை பார்க்கிறார். அதில் அம்மாவுக்கு தலைவலி மாத்திரை கொண்டு போய் கொடுங்க என எழுதி இருக்க பாரதி கண்ணம்மாவுக்காக மாத்திரை எடுத்துக் கொண்டு ஸ்கூலுக்குச் செல்ல கண்ணம்மா கோபத்தைக் காட்டி திட்டி செல்ல அதன் பிறகு பாரதி ஹேமாவை சந்திக்கிறார்.


ஹேமா நீயாவது டாடிய புரிஞ்சுகிட்டயே, எனக்காக உதவி பண்ற என சொல்ல நான் உங்க மேல இன்னும் கோவமா தான் இருக்கேன் நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு புரியல, நீங்க எப்படி எங்க அம்மாவை தப்பா பேசலாம் என திட்டி ஹேமா அங்கிருந்து சென்றுவிட அப்போ இது எல்லாம் செஞ்சது யாரு என பாரதி யோசிக்க லட்சுமி டாக்டர் அப்பா என குரல் கொடுக்கிறார். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள  எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement

Advertisement