• Apr 18 2024

விவாகரத்து முடிந்த கையோடு பாரதிக்கு கல்யாணம்.‌. கண்ணம்மா விட்ட சவால் – இன்றைய எபிசோட் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்..

 பாரதி வருத்தமாக உட்கார்ந்து கொண்டிருக்க அப்போது லட்சுமி தாமரையின் ஃபோனிலிருந்து போன் செய்து எதுக்கு அம்மாவுக்கு விவாகரத்து கொடுத்தீங்க நாம சேர்ந்து வாழலாம்னு தானே சொன்னேன், நான் சொன்னது நீங்க ஏத்துக்கவே இல்ல என சொல்லி அழுகிறார். எல்லாரும் அப்பா அம்மாவோட ஒன்னா இருக்காங்க ஒண்ணா ஷாப்பிங் போறாங்க கோவிலுக்கு போறாங்க தியேட்டருக்கு போறாங்க, எனக்கும் அப்படி எல்லாம் இருக்கணும்னு ஆசை. ஏதாச்சு பண்ணுங்கப்பா என கூறுகிறார்.

அதன் பின்னர்  உட்கார்ந்து யோசித்த பாரதி கணேசனிடம் ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து நான் சொல்வதை எழுது என சொல்லி கல்யாண பத்திரிக்கையை எழுத வைக்கிறார்.மேலும் அதில் மாப்பிள்ளையின் பெயர் பாரதி மணமகளின் பெயர் கண்ணம்மா என எழுதி பத்திரிக்கையை அடிக்கின்றார்.


மறுபக்கம் வீட்டில் தாமரை கண்ணம்மாவிடம் பாரதி பற்றி சொல்ல நல்ல விஷயம் எதுவுமே இல்லையா என கேட்டேன் அவர் இலவசமாக மறுத்து வெற்றி அளிப்பது ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவது போன்ற விஷயங்களை கூறுகிறார். அத்தோடு நீதிமன்றத்தில் என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நான் கேட்ட விவாகரத்தை கொடுத்ததால் அவர் பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர் என்பதை புரிந்து கொண்டேன் என கூறிக் கொண்டிருக்க பாரதி உள்ளே வருகிறார்.


எனினும் இதனையடுத்து கண்ணம்மாவிடம் தனியாக பேச வேண்டுமென சொல்ல தாமரை வெளியே போக பின்னர் பாரதி கல்யாணம் என சொல்லி பத்திரிக்கை கொடுக்கிறார். யாருக்கு எனக்குத்தான் என சொன்னதும் கண்ணம்மாவின் முகம் மாறுகிறது. இதன் பிறகு பத்திரிக்கை வாங்கி படிக்கும் போது அதில் கண்ணம்மாவின் பெயர் இருப்பதை பார்த்து என்ன இது நீங்க என்ன நிம்மதியாக இருக்க விட மாட்டீர்களா என கோபப்பட வர பிப்ரவரி 14ஆம் தேதி வரைக்கும் உனக்காக காத்துக்கிட்டு இருப்பேன், நீ வரலனா அதுக்கப்புறம் அன்னைக்கே வேற ஒரு பெண்ணோட கல்யாணம் பண்ணிக்குவேன் என கூறுகிறார்.


அதன் பின்னர் கண்ணம்மா மிளகாய் வத்தலை உணர்த்திக் கொண்டிருக்கும் போது பாரதி லெட்டர் எழுதி ராக்கெட் விட அதை பார்த்துவிட்டு கண்ணம்மா எழுந்து வந்து பாரதியை திட்ட பாரதி நாளைக்கு காலையில சூரியன் உதயத்திலிருந்து சூரியன் மறைகிற வரைக்கும் நீ என்ன பத்தி நினைக்காம இருக்கணும் என சொல்ல கண்ணம்மா இது சவால நான் ஜெயிச்சுட்டேன் நீங்க எந்த ஊரு என கூறுகிறார். அத்தோடு பாரதி கண்டிப்பா நான் இது சவால்ல ஜெயிப்பேன் அதனால சவாலுக்கு ரெடி என கூறுகிறார்.

எனினும் இதையடுத்து கண்ணம்மா வீட்டுக்குள் சென்று பாரதி சொன்னதை நினைத்து புலம்பி கொண்டு இருக்க அப்போது வரும் தாமரை இந்த போட்டியில் என்னமோ பாரதி தான் ஜெயிப்பாரு போல இருக்கு என சொல்ல நீங்க எப்பவும் அவருக்கு தானே சப்போர்ட் பண்ணுவீங்க பண்ணிகோங்க ஆனா நான் தான் ஜெயிப்பேன் என கூறுகிறான். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement