• Apr 26 2024

நடிகருக்கு மட்டும் தான் கிடைக்குமா எங்களுக்கு கிடைக்காதா ?- கேள்வி எழுப்பிய பாரதி கண்ணம்மா இயக்குநர் பிரவீன் பென்னட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி போன்ற சீரியல்களை இயக்கி வருபவர் தான் இயக்குநர் பிரவீன் பென்னட்.இது தவிர தற்பொழுது புதிதாக ஆரம்பித்துள்ள மகாநதி சீரியலையும் இவரே இயக்கி வருகின்றார். இவர் இயக்கும் சீரியல்களில் சிறிய கேரக்டரில் நடித்தாலும் கூட தங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு கிடைத்துவிடும் என்று பல நடிகர்கள் கூறி வருகிறார்கள் காரணம் இவர் தொடர்ந்து பல வருடங்களாகவே சீரியலை இயக்கி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இவர் இயக்கிய பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் இரண்டுமே இரண்டு சீசன்கள் தொட்டுவிட்டது. அதுவும் முதல் சீசனில் எல்லாமே புது முகங்களாக இவர் அறிமுகம் செய்தாலும் தொடர்ந்து அவர்கள் அடுத்தடுத்த சீரியல்களில் கமிட்டாகி விடுகிறார்கள். அதனால் இயக்குநர் பிரவீன் சீரியல்களில் நடிக்க நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் இவர் இயக்கும் சீரியல்கள் அதிகமாக சர்ச்சைகளில் சிக்குவது உண்டு. 


குறிப்பாக முதல் முதலாக ராஜா ராணி சீரியலில் சின்னையா என்று கணவரை அழைக்கும் முறையை இவர்தான் அறிமுகப்படுத்தி இருந்தார்.இப்ப வரைக்கும் பல சீரியல்களில் அர்ஜுன் சார், ஹஸ்பண்ட் சார் என்று கணவனை அழைக்கும் முறை இவரால்தான் வந்தது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார் அதில், பொதுவாக ஒரு சீரியலாக இருந்தாலும் சரி, திரைப்படமாக இருந்தாலும் சரி அது வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு முக்கியமான காரணம் ரைட்டர் தான் அவருடைய கையில் தான் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக இயக்குநர் இருந்து வருகிறார்.


 ஆனால் எந்த சீரியலில் வெற்றிக்கும் இயக்குநருக்கும், ரைட்டருக்கும் விருதுகள் வழங்கப்படுவதே இல்லை. இது வருத்தமாகத் தான் இருக்கிறது. ஒரு நடிகர் பேட்டி கொடுத்தால் பலர் பார்க்கிறார்கள். பலர் அதை ஷேர் செய்வார்கள் ஆனால் ஒரு இயக்குநர் கொடுத்தால் அந்த அளவிற்கு அது ரீச் ஆவதும் இல்லை. இது எப்போது மாறப்போகுது என்று தெரியவில்லை என்று தன்னுடைய வேதனையை பகிர்ந்து இருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement