• Apr 18 2024

பாரதிராஜா சேர் 7 தடவை என்னை Reject பண்ணியிருக்கிறார்- உண்மையை வெளிப்படையாகக் கூறிய தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

 90களில் இருந்து சின்னத்திரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் தேவ் ஆனந்த்.சீரியல்களில் மட்டுமல்லாது படங்களிலும் நடித்திருக்கின்றார். சீரியல்களில் வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என பல ரோலில் நடித்திருக்கின்றார்.

அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற தொடரிலும், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.


இந்நிலையில் சமீபத்தில் இவர் பிரபல பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரை பயணம் குறித்து கூறிய விடயம் வைரலாகி வருகின்றது.அதாவது நான் நார்த் இந்தியனாக இருந்தாலும் குடி இருந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். எங்கள் குடும்பத்தில் யாருமே மீடியாவை சேர்ந்தவர்கள் இல்லை. என்னுடைய அப்பாவுக்கு சினிமாவில் பலரை தெரியும். அத்தோடு என்னுடைய அப்பாவிற்கு எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா, கலைஞர் என்று பெரிய தலைவர்களை எல்லாம் நன்றாக தெரியும். அதனால் சினிமாவில் முயற்சி செய்யலாம் என்று தான் இந்த துறையை தேர்வு செய்தேன். அதுமட்டும் இல்லாமல் நான் சின்ன வயதிலேயே இருக்கும்போது செத்த பிறகும் நம்மை பார்க்க மக்கள் கூட்டம் வரனும் என்று ஆசைப்பட்டேன். அதற்கு என்ன செய்யணும் என்று தான் யோசித்து அரசியல் இல்லைனா சினிமா என்று முடிவெடுத்தேன்.

பின் நான் மீடியாவை தேர்ந்தெடுத்தேன். என்னுடைய அப்பா இரண்டு வருடம் எனக்கு டைம் கொடுத்தார். அதுக்குள் மீடியாவில் நடிக்க ஆரம்பித்து விடனும் இல்லையென்றால் என்னுடைய பிசினஸை ஆரம்பித்து வேண்டும் என்று சொல்லிவிட்டார். சரி என்று நானும் மீடியாவில் முயற்சி செய்தேன். ஆரம்பத்தில் எனக்கு கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருந்தேன். தாஜ்மஹால் படத்துக்காக ஆடிஷன் போனேன். என் பெயர் சொல்லவும் பாரதிராஜா சார் வடநாட்டு பையனா என்று கேட்டார். ஆமாம், என்று சொல்லவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.


தொடர்ந்து ஐந்து முறை இதே ஆடிஷனுக்கு போய் ரிஜெக்ட் ஆனேன். பின் பிரண்டு மூலமாக தான் எனக்கு ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆர்டிஸ்ட் பாரதிராஜா சார் என்னை பார்த்த உடனே, உன்னை தான் அன்னைக்கே வேணாம் என்று சொல்லிவிட்டேனே என்று சொன்னார். உங்கள் படத்தில் நடிக்க விரும்புகிறேன் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று சொன்னேன். சரி என்று பாரதிராஜா சாரும் நடிக்க வைத்தார். அந்த தாஜ்மஹால் படம் எனக்கு ஒரு நல்ல அறிமுகத்தை மக்கள் மத்தியில் கொடுத்தது. அதற்கு பிறகு அஜித் சார் உடன் உல்லாசம் படத்தில் நடித்தேன். அந்த படம் மூலமாகவும் அஜித் சாரின் நட்பு கிடைத்தது. மச்சின்னு தான் அஜித் சார் என்னை கூப்பிடுவார்.


அவரோட ஆபீஸ்க்கு எல்லாம் போய் மணிக்கணக்காக பேசி இருக்கிறேன். அமர்க்களம் படத்திற்கு பிறகு என்ன ஆச்சு என்று தெரியவில்லை அப்படியே எங்கள் இருவருடைய தொடர்பும் கட் அப்படியே விட்டது. மேலும், சினிமா வாய்ப்பு குறைந்தவுடன் நான் சீரியல் பக்கம் வந்து விட்டேன். சித்தி சீரியல் எனக்கான ஒரு அடையாளத்தை சின்னத்திரையில் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. நான் கதாநாயகனாக பத்து சீரியலில் நடித்திருக்கிறேன். இருந்தாலும், எனக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் பிரபலத்தை கொடுத்தது. அதனால் அதிலேயே கவனம் செலுத்தலாம் என்று நடித்து வருகிறேன். இடையில் ஒரு மூணு வருடம் எதுவும் இல்லாமல் வீட்டில் சும்மாதான் இருந்தேன் என்றும் குறிப்பிட்டார்.


Advertisement

Advertisement

Advertisement