• Apr 20 2024

மெல்ல மெல்ல நினைவாற்றலை இழந்து வரும் பானுப்ரியா.. இவருக்கா இப்படி ஒரு நிலமை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாத் திரையுலகில் 90காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பானுப்ரியா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து இருக்கிறார். 


இவ்வாறு பல படங்களிலும் பிசியாக நடித்து வந்த பானுப்ரியா கடந்த 1998-ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். இவர்களுக்கு அபிநயா என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.


பானுப்ரியா தமிழில் கடைசியாக பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' மற்றும் அசோக் செல்வன் நடித்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' போன்ற படங்களில் தான் நடித்திருந்தார். அதன்பின் பட வாய்ப்புகள் எதுவும் இன்றி தவித்து வருகின்றார். 

இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டதாக கூறி உள்ளமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதில் அவர் கூறுகையில் “எனது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்த பின்னர் எனக்கு நினைவாற்றல் மிகவும் குறைந்துவிட்டது. எதையும் நியாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. மனமும் வெறுமையாகிவிட்டது. ஷூட்டிங்கில் டயலாக் மறந்து போன சம்பவங்களும் நடந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக தான் இப்படி நடக்கிறது” என மிகவும் உருக்கமாக கூறினார்.


அதுமட்டுமல்லாது தன்னைப் பற்றி பரவிய வதந்திகள் குறித்து அவர் கூறுகையில் "நான் என் கணவனை விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் பலவும் பரவின. ஆனால் அது எதுவும் உண்மையில்லை. தற்போது என் கணவர் உயிருடன் இல்லாததால் அதைப்பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன் எனது உடல்நிலை குறித்தும் ஒரு சில வதந்திகள் பரவின. அப்போது நடிகை ராதா பதறியடித்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார்" எனவும் பானுப்ரியா அப்பேட்டியில் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 80ஸ் நடிகர், நடிகைகளின் ரீயூனியன் நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொள்ள வில்லை என்கிற கேள்விக்குப் பதிலளிக்கையில் தனக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறியிருக்கின்றார் பானுப்ரியா. 

மேலும் தற்போது முழுநேரமும் வீட்டிலேயே இருப்பதாகவும், புத்தகம் படிப்பது, பாடல்களைக் கேட்பது, வீட்டு வேலைகளை செய்வது என தன்னை எப்போதுமே பிசியாக வைத்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.  அதேபோல் அவரது ஒரே மகளான அபிநயா, தற்போது லண்டனில் பட்டப்படிப்பு படித்து வருவதாகவும் பானுப்ரியா அந்த பேட்டியில் ஓப்பனாக கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்த பானுப்ரியா, தற்போது நினைவாற்றல் குறைந்துவிட்டதாக கூறியதைக் கேட்டு ரசிகர்கள் பலரும் மனமுடைந்து போய் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement