• Apr 20 2024

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த இடத்திற்கு செல்லும் ஆலியா.... ஆசீர்வதித்த சஞ்சீவ்... குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையைப் பொறுத்தவரையில் இப்போது ஏராளமான நடிகர்கள், நடிகைகள் வந்துவிட்டார்கள். புதிய நடிகர்கள் வரும்போது இதற்கு முன் நடித்து வந்த நடிகர்களை மக்கள் மிகவும் மிஸ் செய்கிறார்கள்.

அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்.


இவர்கள் இருவரும் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து பலரின் மனங்களைக் கொள்ளை கொண்டு நிஜ வாழ்க்கையிலும் இவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டு தற்போது ரியல் ஜோடியாகி விட்டனர்.

மேலும் திருமணத்தை தொடர்ந்து புது வீடு வாங்கியும் குடியேறிய இவர்களுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இவர் தனது குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்க்கை நடாத்தி வந்தனர்.


இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்றைய தினம் முதன் முதலாக ஷூட்டிங் இற்கு செல்கின்றார் ஆலியா. இதற்கு அவர் தன்னுடைய கணவரிடம் ஆசீர்வாதம் வாங்கி செல்கின்றார். பதிலுக்கு சஞ்சீவும் "நல்ல படியாக போயிற்று வருமாறு கூறுகின்றார். 


அதுமட்டுமல்லாது "நிறைய அவார்ட்ஸ் வின் பண்ண வேண்டும் எனவும் கூறி தனது மனைவி ஆலியாவிற்கு செல்லமாக ஆசி கூறி வழி அனுப்பி வைக்கின்றார். இவரிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்து மழையினைப் பொழிந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement