• Apr 24 2024

“நான் அப்படி நடிச்சதுனாலே...” மனம் திறந்து பேசிய பாக்கியலட்சுமி புகழ் ரேஷ்மா ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தொகுப்பாளினியாக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்த ரேஷ்மா இன்று திரைப்படங்கள், வெப் தொடர்கள், டிவி சீரியல்கள் என பிஸியான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருகின்றார்.இது தவிர தற்போது அந்தரங்கம் அன்லிமிடெட் என்ற பாட்காஸ்ட் தொடரையும் நடத்த இருக்கின்றார். ஏர் ஹோஸ்டர்ஸ், நர்ஸ், தொகுப்பாளினி என பலமுகம் கொண்டவராக இருக்கும் ரேஷ்மா தற்போது பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.

2015 ஆம் ஆண்டு வெளியான மசாலா படம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரேஷ்மா.எனினும் அதைத்தொடர்ந்து கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் நடித்து பட்டையயை கிளப்பியுள்ளார் ரேஷ்மா. அத்தோடு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து ரசிகர்களிடமும் பிரபலமானவராக உருவெடுத்துள்ளார் ரேஷ்மா.எனினும் தற்போது சமயம் தமிழ் நேயர்களுக்காக ரேஷ்மா மனம்திறந்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் பயணத்தை ஆரம்பித்த ரேஷ்மா விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால் அதன் பின் அதே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க அழைத்ததால் ரேஷ்மா சற்று படங்களில் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் ரேஷ்மா. அதன் பின்னர்  அவருக்கு பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மாவிற்கு அந்த கதாபாத்திரம் பெரிய பெயரை வாங்கி கொடுத்தது.

எங்கு சென்றாலும் ரேஷ்மாவை ராதிகா என ரசிகர்கள் அழைக்கும் அளவிற்கு அந்த கதாபாத்திரம் அவருக்கு பெயரை வாங்கி கொடுத்தது.எனினும் அதன் பின் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரில் நடித்து மேலும் ரசிகர்களிடம் பிரபலமானார் ரேஷ்மா.இவ்வாறுஇருக்கையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், விலங்கு போன்ற படங்களில் கிளாமராக நடிப்பதினால் அதுபோன்ற கதாபாத்திரங்களே தொடர்ந்து வருவதாக கூறியுள்ளார் ரேஷ்மா.

அத்தோடு தான் வித விதமான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புவதாகவும் கூறினார். குறிப்பாக கவர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதினால் சிலர் தவறாக கருதுகின்றனர். மேலும் சிலர் தவறாக கமென்ட்களை பதிவிடுகின்றனர். நான் நடிக்கும் கதாபாத்திரம் வேண்டுமானால் அவ்வாறு இருக்கலாம் ஆனால் அதுவே என் கேரக்டர் ஆகிவிடாது.

மேலும் இவ் தவறான கமென்ட்கள் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது. நான் நடிக்கிறேன் அதற்கு எனக்கு சம்பளம் தருகின்றார்கள். சமூகத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுகின்றேன், அதற்கு சம்பளம் தருகின்றார்கள். எனவே என் வேலையை நான் பார்த்துவருகின்றேன். யார் என்ன நினைக்கின்றார்கள் என்பது பற்றி நான் யோசிக்கிக்கவில்லை என்றார் ரேஷ்மா.

இந்நிலையில் மிர்ச்சி ப்ளஸ் உடன் இணைந்து ரேஷ்மா பசுபுலேட்டி பாலியல் நலம் குறித்தான பாட்காஸ்ட் தொடரை வழங்கவுள்ளார். இந்த பாட்காஸ்ட் தொடர் டேட்டிங் மற்றும் பாலியல் சுகாதாரம் பேணுதல், பாதுகாப்பான பாலியல் உறவு வைத்தல், பாலியல் ரீதியாக திருப்தி பாடுவதற்காக ரகசியங்கள் வரை அனைத்தையும் பேசுகின்றது. எனவே நேயர்கள் பாலியல் தொடர்பான அத்தனை தகவல்களையும் அந்தரங்கம் அன்லிமிடெட் நிகழ்ச்சியில் தெரிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement